நறுவிலிக்குளத்தில் 906 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது! [Thursday 2025-09-04 10:00] |
![]() மன்னார்- முருங்கன் நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் 906 கிலோ கேரள கஞ்சா பொதிகள் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் , கடற்படையினருடன் இணைந்து மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் புதன்கிழமைகாலை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுத்தனர். |
இதன் போது 25 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 398 சிறிய பொதிகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா 906 கிலோ கிராம் எடை கொண்டது எனவும் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் அதன் பெறுமதி பல கோடி என தெரிய வருகிறது. |
-
4 செப்., 2025
www.pungudutivuswiss.com