-

25 அக்., 2025

கச்சாயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்! [Saturday 2025-10-25 06:00]

www.pungudutivuswiss.com


யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று  இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது

தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர்.

இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad