நெடுந்தீவு வெடியரசன் கோட்டை வீதி புனரமைப்பின் போது தொல்பொருள் சின்னமாக அடையாளம் இடப்பட்டிருந்த பகுதி சேதமாக்கப்பட்டதால் சாரதிகள் இருவர் பொலிஸாரால், புதன்கிழமை (05) அன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் அதன் தொடர்ச்சியான நடவடிக்கைக்காக துறைசார் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெயரில்.நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை (06) மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படுத்தியிருந்தனர். குறித்த சந்தேக நபர்களை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் நீதிமன்று விடுவித்துள்ளது. |