| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
-
13 ஆக., 2012
12 ஆக., 2012
மன்னார் நீதவான் மீதான அச்சுறுத்தல்! சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எதுவுமில்லை! சட்டமா அதிபர்
மன்னார் நீதவானுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது - டில்ருக்சன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள்!
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தில் காயமடைந்து கோமா நிலையிலிருந்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்சன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு
இந்தியா எமக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நாவில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது: ஜனாதிபதி
இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருந்து, எமக்கு மேலும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ஆதரவளித்திருந்தால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணை இருந்திருக்காது என ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ச கூறியுள்ளார்.
டெசோ மாநாடு! நீதிபதி இரு தரப்பினரிடமும் சரமாரியாக கேள்விகள்! வழக்கை விசாரிக்க மறுப்பு
டெசோ மாநாடுக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க டெசோ மாநாட்டு அமைப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி பால் வசந்தகுமார், இருதரப்பினரையும் சரமாரியாக கேள்விகள் கேட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க
அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை! தென்னாபிரிக்கா அனுசரணை? இருதரப்பையும் தென்னாபிரிக்க தூதுக்குழு சந்திப்பு
இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் அனுசரணையாளராக தென்னாபிரிக்கா செயற்படவுள்ளது. அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதை வரவேற்றுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
டெசோ மாநாட்டை தொடரும் சோதனைகள்! புலிகள் பங்கேற்கக்கூடும் என்று கூறுவது உண்மைக்கு மாறானது! கருணாநிதி
திமுக நாளை சென்னை நடத்தவிருக்கும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பான டெசோவின் மாநாடு பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து எதிர்நோக்குகிறது. இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிவரும் ஈழத்தமிழர்களுடைய வாழ்வுரிமையை பாதுகாப்பதே இம்மாநாட்டின்
அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அமையும்: சோ. யோகானந்தராஜா
தமிழ் மக்கள் த.தே.கூட்டமைப்புக்கு அளிக்கும் வாக்கு, எமக்குரிய தீர்வை உடன் வழங்க வேண்டும் என்ற செய்தியை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் காட்டுவதாக அமையும். மாறாக இந்த அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்கு, அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்குவதாக
11 ஆக., 2012
அமைதி முயற்சிக்கு உதவ தென்னாபிரிக்க அரசு தயார்; கூட்டமைப்புடனான சந்திப்பில் அந்த நாட்டு அமைச்சர் உறுதி |
மூன்று தசாப்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி முயற்சிகளுக்கு முழுவீச்சில் உதவுவதற்குத் தென்னாபிரிக்கா முன்வந்திருக்கிறது.கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்திப்பின்போது தென்னாபிரிக்க |
10 ஆக., 2012
டில்ருக்சனது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தை சென்றடையும்! நாளை நல்லடக்கம்!
வவுனியா சிறைச்சாலையில் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்த மரியதாஸ் டில்ருக்சனது (வயது 36)பூதவுடல் இன்று வெள்ளிக்கிழமை அவரது சொந்த இடமான யாழ். பாஷையூரைச் சென்றடையவுள்ளது.
முள்ளிவாய்க்கால் சொத்துக்கள் மக்கள் கண்முன்னே அபகரிக்கப்படுகின்றன!
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க போரின்போது கைவிடப்பட்ட வாகனங்களை பொறுப்பேற்பதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் இன்று சென்றபோது, அங்கே மக்களின் வாகனங்கள் அவர்களின் கண்முன்னே பாரிய உபகரணங்களை உபயோகித்து துண்டு துண்டாக்கப்படுவதை
சுவிஸில், விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் 800 கிலோ மீற்றரைத் தாண்டித் தொடர்கின்றது!
துர்க்கா மாநிலமூடாக சப்கவுசனைச் சென்றடைந்த வைகுந்தனை அந்த மாநில மக்கள் வரவேற்றனர்.ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம். செங்காளன் மாநிலத்திலிருந்து 08.08.2012 அன்று சப்கவுசன் மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டு சப்கவுசனை சென்றடைந்தது.
தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு
இலங்கையின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ
ஐ.நா மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கை சமர்பித்தது இலங்கைமனித உரிமை நிலைமை
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு சமர்பித்துள்ளது.ஜெனீவாவில் அடுத்த மாதம் அகில கால மீளாய்வு அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை இந்த அறிக்கையை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சமர்ப்பித்துள்ளது.
9 ஆக., 2012
ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம்
ஆபாச சி.டி.யில் சிக்கியது எப்படி? இளம்பெண்ணின் கதறல் வாக்குமூலம் !
“கல்லூரி மாணவிகளின் ஆபாச சி.டி.! சிக்கிய கும்பலை பணத்துக்காகத் தப்பவிடும் போலீஸ்’ என்ற தலைப்பில் கடந்த ஜூன் 12 தேதியிட்ட அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதில் காதல் வலைவீசி கல்லூரி மாணவி பூமிகா உள்ளிட்ட சில மாணவிகளை ஆபாசப் படம் எடுத்து
8 ஆக., 2012
வெள்ளி பதக்கம் வென்ற விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சுபேதார் விஜயகுமார் வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இமாச்சல பிரதேச மந்திரிசபை விஜயகுமாருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் வெள்ளி பதக்கம் வென்றதற்காக அவரை பாராட்டியுள்ளது.லண்டனில் பிரிட்டன் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழ தேசியக் கொடி: இலங்கை கடும் கோபத்தில்
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசாரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுவதற்குப் பிரிட்டன் இடமளித்திருப்பது தொடர்பில் இலங்கையை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தெரியவருகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உப குழு அமைக்கும் கலந்துரையாடல் நாளை யாழில் ஆரம்பம்
நாளை காலை 9 மணிக்கு யாழ். கிறீன்கிறாஸ் விடுதியில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் ஏற்பாட்டில் பிராந்திய சிவில் உப குழுவை அமைப்பது தொடர்பான சிவில் சமூகப் பதவிக்கு சோரம் போகாத தமிழர் தரப்பின் அரசியல் பாராட்டுகிறார் ஹக்கீம் |
சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை
எதிர்வரும் 12ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அவ் அமைப்பினரால் நிறைவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் அம் மாநாட்டை
7 ஆக., 2012
பிள்ளையான் கட்சியின் இணைப்புச் செயலாளர் செல்வேந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவு
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பு செயலாளராகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நிருவாகச் செயலாளராகவும் பணிபுரிந்த திரு.அ.செல்வேந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.
(வீடியோ இணைப்பு)
சிங்கள மக்களுக்கு எதிராக விரலை கூட நீட்டாத உத்தமர்கள் புலிகள் - தா.பாண்டியன் அதிற்சியில் இந்திய ஊடகம்
யுத்தம் நடந்த காலத்தில் எமது இந்திய கம்மினிஸ் கட்சியும் சரி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி கொழும்பு மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என சிந்திக்கவும் இல்லை செயற்படுத்தவும் இல்லை குறிப்பாக புலிகள் விரல் கூட நீட்டாத உத்தம உலக போராட்ட அமைப்பு என்பதில் மாற்றமில்லை என இந்திய
அடித்துத் துன்புறுத்தி மண்டை உடைந்த நிலையில் மனைவியைப் பூட்டி வைத்திருந்தார் கணவன்; வீட்டுக்கு வந்து தையல் போட்டார் ஆஸ்பத்திரி தொழிலாளி இருவரும் தற்போது மறியலில்; எழுவைதீவில் சம்பவம் |
ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கணவன், மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு |
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு |
தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர். |
எஞ்சியுள்ள புலிகளால் இலங்கைக்கு ஆபத்து அச்சப்படுகிறார் கோத்தபாய |
விடுதலைப் புலிகளின் எச்சங்கள் இன்னுமிருக்கின்றன என் பதை நாம் அறிவோம். எஞ்சியுள்ள இந்தச் சக்திகள் இன்னும் இலங்கைக்கு வெளியே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. |
ஒலிம்பிக் வட்டு எறிதல்: இந்திய வீரர் முதலிடம் பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி |
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தடகளப்போட்டியில் வட்டு எறிதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. |
லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வட்டு எறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். |
போராட்டக்காரர்களுடன் இணைந்தார் சிரியா பிரதமர்: ஜனாதிபதிக்கு பலத்த அடி |
ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிரான போராட்டம் ஆரம்பமானதில் இருந்து, அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற மிக உயர் பிரமுகர் ரியாட் ஹிஜாப் ஆவார். |
சிரியா பிரதமர் ரியாட் ஹிஜாப் அரசாங்கத்திலிருந்து விலகி, போராட்டக்காரர்களுடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. |
மனைவியை அடித்து காயப்படுத்திய கணவன்! சிகிச்சையளித்த தகுதியில்லாத ஆஸ்பத்திரி தொழிலாளி!- இருவரும் விளக்கமறியலில்
ஒருவார காலமாக வீட்டில் வைத்து மனைவியை அடித்துத் துன்புறுத்திய கொடூர கணவன் ஒருவர்., மனைவிக்கு மண்டை உடைந்த போதும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லாது வைத்தியசாலைத் தொழிலாளி ஒருவரை அழைத்து வந்து அவர் மூலமாக மருந்து கட்டி தையலும் போட்டு தொடர்ந்தும் வீட்டிலேயே தடுத்து வைத்திருந்துள்ளார்.
அஷ்ரப் காலத்து தீர்வுகள் இப்போது செல்லுபடியாகுமா?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரபுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், தற்போதைய முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு விடயமாக இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...
அம்பாறையில் விநாயகர் விக்கிரகத்தை பௌத்த விகாரைக்கு அடாவடியாகக் கொண்டு சென்ற பிக்கு
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாணமை பகுதியில் வசிக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வழிபாட்டு தலமாக பாணமை சித்தி விநாயகர் ஆலயம் விளங்கியது.இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த
புகையிரத மலசலகூடத்தில் பெண் மீது துஷ்பிரயோகம்! மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதம் ஒன்றின் மலசலகூடத்தில் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினார்கள் என்ற சந்தேகத்தின் கீழ் மூன்று இராணுவ சிப்பாய்கள் கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)