![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார். |
-
23 ஆக., 2024
கட்சி என்ன முடிவெடுத்தாலும் அரியநேத்திரனுக்கே எனது ஆதரவு! - சிறீதரன் உறுதி
உள்ளூராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் உத்தரவு.
![]() நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முடிந்தளவு விரைவில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறும் இன்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது |
20 ஆக., 2024
இன்னொரு வேட்பாளரை வெற்றிபெற வைக்கவே பொது வேட்பாளராம்!
![]() தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் தமிழ் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் ஒருமித்த கருத்துடன் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் |
இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இன்று கோடிக்கணக்கான சொத்தினை கொண்டுள்ளார். அவருக்கு அந்த சொத்து எவ்வாறு வந்தது என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அந்த வகையில் அனுரகுமார திஸாநாயக்கா, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ குறிப்பிடக் கூடிய மூவராவர். அத்தோடு நாமல் ராஜபக்சவும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் தெற்கிலேயுள்ள வாக்குகள் சிதறிச் சின்னா பின்னமாகக் கூடிய நிலை உருவாகலாம். அந்த வகையில் தமிழ் மக்களுடைய வாக்குகளுக்குக் கூடிய பெறுமதி காணப்படும். அதில் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய அதிகூடிய வாக்குகள் இருக்கிறது. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சிந்தித்து தமது பெறுமதியான வாக்கினை அளிக்க வேண்டிய கடப்பாடுடையவர்கள். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியினராகிய நாம் நேற்று முன்தினம் எமது மாவட்ட, தொகுதி மற்றும் பிரதேச மட்ட மகளீர், வாலிபர் அணி உறுப்பினர்களை அழைத்து அவர்களது கருத்துக்களை உள்வாங்கியிருந்தோம். அந்தவகையில் நாம் அனைவரது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்க வேண்டுமென்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு மாவட்டக் குழுவின் தீர்மானத்தை மத்திய குழுவுக்குச் சமர்ப்பிப்போம். வவுனியாக் கூட்டத்தில் கலந்து கொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்றதொன்று என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில் தமிழரசுக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பநிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாக பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை. அவர் தனது விருப்பத்திற்கிணங்க சில கட்சிகளின் ஆதரவுடனே முன்னெடுக்கப்பட்ட விடயமாகும். அத்தோடு தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை தானே முதலில் குருக்கள் மடத்தில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டில் வெளிப்படுத்தியதாகவும் ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை. இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனக்கெதிராக நாமல் ராஜபக்ச களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. அவரின் நினைப்பில் ஜனாதிபதி தேர்தல் வரும்போது மொட்டுக்கட்சி தமக்கு ஆதரவளிக்குமென்ற உணர்வே காணப்பட்டது. தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ச தரப்பினருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரியும். அதனால்தான் வாக்கைப் பிரிக்கும் செயற்பாடாகத்தான் இருக்கும் என ஆரம்பத்திலிருந்தே கூறுகிறேன். இந்தப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியாக இருக்கிறார். ஏனெனில் அவருக்கான அடையாளம் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர். இது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாடாகும். இவ்வாறான காலகட்டத்தில் எமது இளைஞர்களின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு பதில் கூற வேண்டிய தேவையுள்ளது. இது நாம் எடுத்த தீர்மானமல்ல.இஸ்லாமிய சகோதர்களில் சிலர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ பக்கமும் இருக்கின்றனர். எனவே மாவட்ட தமிழ் மக்கள் எமது கட்சியின் முடிவின்படி செயற்பட வேண்டுமென்றார் |
19 ஆக., 2024
சுமந்திரன் ஒருபுறம் கஜேந்திரன் மறுபுறம் எதிர்பிரச்சாரங்கள் மத்தியிலும் திரண்ட மக்கள்!
அரியநேத்திரனுக்கு தடை - சிங்கள வேட்பாளர்கள் பக்கம் சாய்கிறது தமிழரசு
![]() பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரியநேந்திரன் அவர்களுக்கு விளக்கம் கோரி இரண்டு வார கால அவகாசம் கொடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதுவரை கட்சிக் கூட்டங்களிலும் பங்கேற்ற தடை எனத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
18 ஆக., 2024
மொட்டை அழித்து விட்டார் ரணில்!
![]() ராஜபக்ச குடும்பத்தின் மீதுள்ள ஊழல், மோசடிக் குற்றங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேதான் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இறுதியில் ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுன கட்சியையும் நாசமாக்கி விட்டார். பொதுஜன பெரமுன கட்சியைத் தற்பொழுது காப்பாற்றிக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ தன் மகனை ஜனாதிபதிப் போட்டியில் களமிறக்கியுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியைப் பாதுகாப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். |
தந்தை செல்வாவுக்கு அஞ்சலி செலுத்திய பின் பிரசாரத்தை தொடங்கினார் அரியநேத்திரன்
![]() தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் இன்றையதினம் தந்தை செல்வா நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார். |
|
17 ஆக., 2024
34 கட்சிகளின் பிரமுகர்களுடன் ரணில் உடன்படிக்கை
![]() 34 அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாதிடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று முற்பகல் 10.06 சுப நேரத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட்டார். |
15 ஆக., 2024
எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் ரணில்!
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார் |
சங்கு சின்னத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்!
![]() ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுகின்ற பா.அரியநேத்திரனுக்கு 'சங்கு' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. |
கை கொடுத்தார் ரணில் - கும்பிட்டார் சஜித்!
![]() தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பகல் 11 மணியுடன் நிறைவடைந்தது |
14 ஆக., 2024
திருடனின் முகமூடி கழன்றது - சிசிடிவியில் சிக்கினான்!
![]() யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பான CCTV காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் |
சஜித்துடன் 27 கட்சிகள் உடன்படிக்கை!
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர் |
36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்!
![]() ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது |
9 ஆக., 2024
கொக்குத்தொடுவாய் புதைகுழி- இலக்கத்தகடுகளை பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை
![]() முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் புதைகுழி வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படுள்ளது |
7 ஆக., 2024
சஜித் - தயாசிறி புரிந்துணர்வு ஒப்பந்தம்!
![]() ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அணி ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது |
வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!
![]() வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது |
19 இந்திய மீனவர்கள் விடுதலை- படகோட்டிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபா தண்டம்
![]() 31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் |
மன்னார் வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்!
![]() மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும்,கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள்.அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். |
மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேறியது!
![]() மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீள இயங்க வைப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பில் விவாதம் இன்றி வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. |
5 ஆக., 2024
ராஜபக்ச குலத்தை முத்தமிட்டு நாட்டை நாசமாக்கிய தரப்பினர் ரணிலுடன் கைகோர்ப்பு!
![]() நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த மற்றொரு சட்டவிரோத கொடுக்கல் வாங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் இல்லாமல், இணைய வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கையால் 1.2 பில்லியன் டொலர்களை இழந்துள்ளோம். இந்தத் திருட்டை நிறுத்தி இந்த பணத் தொகையை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கியிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். |
4 ஆக., 2024
100 ஐ தாண்டியது தாவியவர் எண்ணிக்கை!
![]() இலங்கைத்தீவில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக முன்னிலையாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளதாக ரணிலுக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரவிக்கின்றன |
தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க 5 புலம்பெயர் அமைப்புகள் ஆதரவு!
![]() எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ்மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளையும், கோரிக்கைகளையும் ஜனநாயக முறையில் உலகறியச்செய்வதுடன் சர்வதேசமயப்படுத்தமுடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளன |
பாய்ச்சலுக்கு தயாராகிறாரா பசில்?
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்காது என உத்தியோகபூர்வமாக அறிவித்துவிட்டு மிகவும் அமைதியாக இருந்து வரும் பசில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலமான எதிர்தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் |
மன்னார் வைத்தியசாலையில் அத்துமீறிய வைத்தியர் அர்ச்சுனா கைது
![]() மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். |
3 ஆக., 2024
மொட்டு வேட்பாளர் 7ஆம் திகதி அறிவிப்பு
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்ண்டவாறு குறிப்பிட்டார். |
14 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்
![]() 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது |
செம்டெம்பர் 6ஆம் திகதி மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலம் மீதான விவாதம்!
![]() மாகாண சபைகள் தேர்தல் சட்டமூலத்தின் மீதான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் செம்டெம்பர் ஆறாம் திகதி முன்னெடுக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
பனிப் போருக்குப் பின்னரான பெரிய கைதிகள் பரிமாற்றம்?
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே ஒரு வரலாற்று
2 ஆக., 2024
ரணிலுடன் சுமந்திரன் இணக்கம்! - நேற்றைய சந்திப்பில் முடிவு.
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது |
கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி!
![]() இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் ஷல்கி உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பளித்தனர் |
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களின் இலங்கைப் பயணம் ரத்து?
![]() ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன |
தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
![]() ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது |
31 ஜூலை, 2024
30 ஜூலை, 2024
ரணிலுடன் இணையும் மொட்டு எம்.பிக்கள்!
![]() பொதுஜன பெரமுன அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நேற்று இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது. |
வெளிநாடு செல்வதற்காக 20 இலட்சம் ரூபாவுடன் சென்ற இளைஞன் வவுனிக்குளத்தில் சடலமாக மீட்பு!
![]() வெளிநாடு செல்வதற்காக 20 இலட்சம் ரூபா பணத்துடன் சென்ற இளைஞன் வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் |
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெறுவார்!
![]() ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்காவிடின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் பெறுவார்.என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார் |
மொட்டு கூட்டத்தில் ரணிலுக்கு 11 பேர் ஆதரவு! [
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து தனியான வேட்பாளர் ஒருவரை முன்வைக்க நேற்று பிற்பகல் தீர்மானித்துள்ளது. இந்த யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை உறுப்பினர்கள் 11 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
27 ஜூலை, 2024
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கமாட்டேன்- சபாநாயகருக்கு ஜனாதிபதி அறிவிப்பு!
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்க நேரிடும் போது, அதனை முன்னிலைப்படுத்தி தனக்கு எதிராக தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்படக் கூடும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது |
பதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அறிவித்துள்ளார். |
26 ஜூலை, 2024
"உ.பி, குஜராத்திற்கு ரூ.400 கோடி, தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.20 கோடி" - உதயநிதி ஆவேசம்!
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாஜக பாரபட்சம் காட்டுகிறது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என ஒன்றிய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள புள்ளிவிவரம், ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் தான் ஒன்றிய பாஜக அரசு என்பதற்கான சான்றாக உள்ளது. |
பாலிஸ்டிக் ஏவுகணையை முறியடிக்கும் இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம்!
![]() உலகின் அனைத்து பாரிய நாடுகளிலும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளன. இதன் மூலம் இரசாயன, உயிரியல், வழக்கமான அல்லது அணுசக்தி தாக்குதல்களை நடத்தலாம். இந்தியாவிடமும் சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. அண்டை எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடமும் இந்த ஏவுகணைகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஏவுகணை தாக்குதலை அழிக்க இந்தியா பிரம்மாஸ்திரத்தை தயாரித்துள்ளது. அதன் வெற்றிகரமான சோதனைகளும் செய்யப்பட்டுள்ளன |
25 ஜூலை, 2024
நாளை நள்ளிரவில் வெளியாகிறது தேர்தல் அறிவிப்பு!
![]() ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன |
இன்று பதவி விலகுகிறார் விஜேதாச ராஜபக்ஷ?
![]() நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமைச்சு பதவியை இராஜிநாமா செய்வது தொடர்பிலேயே அவரது விசேட அறிவித்தலில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது |
30 நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு
![]() அரசியல் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 30 நிகழ்வுகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆணைக்குழுவின் உத்தரவால் நிறுத்தப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். |
அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார் ஜனாதிபதி- கொழும்பு அரசியலில் பரபரப்பு
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது |
சனிக்கிழமைக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு!
![]() 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை சனிக்கிழமைக்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. வியாழ நடைபெறவிருக்கும் கூட்டம் ஆணைக்குழுவின் வழக்கமான கூட்டமே தவிர தேர்தல் தேதி குறித்து விவாதிக்கும் நோக்கம் இல்லை எனவும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பிற்கான வர்த்தமானி அறிவித்தல் வார இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக செயற்பட இடைக்காலத் தடை! - உயர்நீதிமன்றம் அதிரடி.
![]() தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. |
24 ஜூலை, 2024
மருத்துவர் அர்ச்சுனா பேராதனை வைத்தியசாலை வைத்திய அதிகாரியாக தரமிறக்கம்
![]() யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக இருந்த மருத்துவர் இராமநாதன் அர்சுனா பேராதனை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாக தரமிறக்கப்பட்டுள்ளார். |
சஜித்தின் புதிய கூட்டணி - ஓகஸ்ட் 8 இல் கைச்சாத்து
![]() அடுத்த தேர்தல்களை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய ஐக்கிய மக்கள் கூட்டணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி கைச்சாத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார் |
மொட்டு கட்சியின் 12 மாவட்டத் தலைவர்கள் ரணில் வசம்
![]() ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைத் தவிர வேறு ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தினால் அதற்கு எதிராக செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 மாவட்டங்களின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்றுமுன்தினம் இரவு கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மொட்டுக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பெரும்பான்மையினரின் கருத்துக்கு எதிராக சென்று கட்சி வேறு வேட்பாளரை நியமித்தால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அங்கு அவர்கள் முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய 75 மொட்டுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அமைப்பு ரீதியான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. |
23 ஜூலை, 2024
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு உடன்படிக்கையின் 9 அம்சங்கள்
தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது |