புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2012

பிரபாகரனின் வீட்டை பார்வையிட்ட தென்னிலங்கை பெண் தவறி விழுந்து மரணம்
 
தேசியத்தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் அவ் வீட்டிற்குள் தவறிவிழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த ஸ்ரீயலதா (வயது 56) என்ற வயோதிபப் பெண்ணே யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவராவார்.
கடந்த 25ம் திகதி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் இருக்கும் பிரபாகரனின் வீட்டை சுற்றிப்பார்க்க தனது குடும்பத்தினருடன் சென்றிருந்த மேற்படி பெண், அவ்வீட்டிற்குள் தவறி விழுந்த நிலையில் அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது.
இந்நிலையில், அவர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை அண்மைக்காலமாக தென்னிலங்கையிலிருந்து ஏராளமான மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் புதுக்குடியிருப்பில் உள்ள வீட்டை பார்வையிடுவதற்காக சுற்றுலா செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad