புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2013


எந்த நேரத்திலும் காங்கிரஸ் கூட்டணி கவிழும்: நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும்: வெங்கையா நாயுடு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழலாம் என்பதால், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய அரசு உறுதியாக உள்ளது என காங்கிரஸ் அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் செயற்கை சுவாசத்தில்தான் அரசு பிழைத்திருக்கிறது. எந்த நேரத்திலும் உயிர்காக்கும் கருவிகள் நீக்கப்பட்டு அரசு கவிழலாம். அக்டோபர் அல்லது நவம்பரில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. நாட்டின் பொருளாதார நிலை மேலும் சீர்கேடு அடையும் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. காங்கிரஸ் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். கூட்டணியை எப்படி உறுதியுடன் வைத்திருப்பது என்ற திறன் காங்கிரசுக்கு இல்லை. சமாஜ்வாதி, பி.எஸ்.பி. கட்சிகள் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கின்றன என்றார்.

ad

ad