புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2013


வேண்டாம் தமிழின உணர்வாஈழம் வேண்டி எதிராஜ் கல்லூரி மாணவி தற்க்கொலை ..?
கௌதமி என்கிற ராசாத்தி ஈழ விடுதலை வேண்டி நஞ்சு அருந்தி தற்க்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் .அதை அறிந்த காவல்துறை அந்த பெண்ணின் உடலை உடனடியாக இன்று மாலையே அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதன் பின்னர் உணர்வாளர்கள் தமிழ் பிள்ளைகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் தகவல் மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை ..தெரியும் பட்சத்தில் அறிவிக்கின்றோம் 536295_571994606152889_216623272_n

வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! இதுவே
இறுதியாக இருக்கட்டும் !
இனி இழப்பதற்கு எதுவுமில்லை . பெறுவதற்கு நிறைய உண்டு . உங்கள் உயிர்கள் தமிழ் தேசத்தின் சொத்துகள் . அதை இனியும் நாங்கள் இழக்க முடியாது. நீங்கள் உங்கள் உயிரை மாய்க்க வேண்டாம் . சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் . எதிரியை வீழ்த்தி விட்டு நாம் வீர மரணம் அடைவோம் . அது தான் தேசிய தலைவர் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடம் . இனியும் இந்த தவறை நம் தமிழினம் செய்ய வேண்டாம் .
கல்லூரி படிக்கும் மாணவி நினைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருக்கலாம் . தங்கள் கருத்தை இணையத்தில் எழுதலாம் . கலைகள் மூலமாக மக்களுக்கு செய்தி கொண்டு சேர்க்கலாம் . சக மாணவிகளோடு சேர்ந்து ஈழப் பிரச்சனைக்கு குரல் கொடுக்கலாம் . கருத்தரங்கில் பங்குபெறலாம். அரசியல் மாற்றத்தை உண்டு பண்ணலாம் . இதை எல்லாம் நாம் செய்ய முடியும் . ஆனால் உயிரை மாய்க்க துணிய வேண்டாம் தம்பி தங்கைகளே .
உங்களை வழி நடத்த ஆயிரம் ஆயிரம் அண்ணன்கள் உயிரோடு இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து களமாடுங்கள் . எதிரிக்கு பாடம் புகட்டுவோம் . இனி ஒரு தமிழ் உயிரும் வீண் போகக் கூடாது.
ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த இன உணர்வாளர் கௌதமி என்கிற ராசாத்திக்கு தமிழர்களின் சார்பில் நம் வீர வணக்கம் .ளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! 

ad

ad