புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2013

காதலர்களின் களியாட்ட இடமாக ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி: மக்கள் விசனம்
யாழ்ப்பாணம் ஏழாலை பெரியதம்பிரான் கோவில் குளத்தடி காதலர்களின் களியாட்ட இடமாக மாறி வருவதாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றார்கள்.
நண்பகல் வேளைகளில் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தமது வீடுகளுக்கு திரும்புகின்ற நேரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும் இதனால் இந்தப் பகுதியில் பிரச்சனைகள் எற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறிப்பிட்ட குளத்தை சுற்றி பற்றைகள் காணப்படுகின்றமை காதலர்களுக்கு நல்ல வசதியாக அமைந்துள்ளது.
இதனையிட்டு பிரதேச சபையோ அல்லது சிறு நீர்பாசனத் தினைக்களமோ உரிய நடவடிக்கைகளை எடுத்து குறிப்பிட்ட குளப் புகுதியில் காணப்படும் பற்றைகளை வெட்டி துப்பரவு செய்ய முன் வரவேண்டும் எனவும் கோரியுள்ளார்கள்.

ad

ad