புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2013

தமிழகத்தில் ஏமாற்றம் : கேரளா, ஆந்திராவுக்கு படையெடுக்கும் விஜய் ரசிகர்கள்

விஜய் நடித்த ‘தலைவா’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர்களில் விஜய்யின் கட்–அவு
ட்கள் மற்றும் கொடி தோரணைகள் அமைத்து தியேட்டர் வாசல்களில் காத்திருந்தனர்.  காலை 9 மணிக்கு மேலாகியும் படம் திரையிடைப்படாததால் எதிர்பார்ப்புகள் எல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.


தமிழகத்தில்தான் படம் திரையிடப்படவில்லையே தவிர, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மும்பையில் ‘தலைவா’ படம் இன்று திரையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து விஜய் ரசிகர்கள் கார், வேன் களில் கேரளா, ஆந்திராவுக்கு படம் பார்க்க புறப்பட்டு சென்றனர்.


இதனால் இரு மாநிலங்களின் எல்லையோர தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது.  சுமாராக ஓடிய தெலுங்கு மலையாள படங்களை தூக்கி விட்டு பல தியேட்டர் அதிபர்கள் ’தலைவா’ படத்தை திரையிட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலும் ‘தலைவா’ வெளியானது. தமிழ் நாட்டில் ‘தலைவா’ படம் எப்போது வெளியாகும் என்று உறுதியாக தெரிய வில்லை. 
 

ad

ad