புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2013

சம்பந்தன் எம்.பி.யின் பிரேரணைக்கு அஸ்வர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை

வடக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்டு வர­வி­ருந்த சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை
தொடர்­பாக ஆளுந்­த­ரப்பு எம்.பி.ஏ.எச்.எம்.அஸ்வர் எழுப்­பிய ஒழுங்குப் பிரச்­சி­னையால் நேற்று வியா­ழக்­கி­ழமை சபை நட­வ­டிக்­கைகள் பிரதி சபா­நா­யகர் சந்­திம வீரக்­கொ­டி­யினால் 10 நிமி­டங்­க­ளுக்கு இடை நிறுத்­தப்­பட்­டன.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வடக்கில் உரு­வா­கி­யுள்ள காணிப் பிரச்­சி­னைகள் தொடர்­பாக சம்­பந்தன் எம்.பி. சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யொன்றை விவா­தத்­திற்கு சமர்ப்­பிக்க முற்­பட்ட போது ஒழுங்குப் பிரச்­சினை கிளப்­பிய அஸ்வர் எம்.பி.இவ்­வி­டயம் தொடர்பில் உயர் நீதி­மன்­றத்தில் 177/2013, 178/2013, 179/2013, 180/2013, 236/2013, 237/2013, 238/2013 ஆகிய இலக்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களும் அதேபோல் 145/2013, 135/2013, 205/2013 ஆகிய இலக்­கங்­க­ளி­லான மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருப்­ப­துடன் அவற்றில் அமைச்சர் ஒரு­வரும் பிர­தி­வா­தி­யாக இணைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் இது நீதி­மன்ற விசா­ர­ணைக்கு உட்­பட அமைந்­தி­ருப்­ப­தற்கு அமைய விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்ள முடி­யா­தென்று சுட்டிக் காட்­டினார். அதன் பிர­காரம் இவ்­வி­டயம் தொடர்பில் சபைக்கு தலைமை தாங்கிக் கொண்­டி­ருக்கும் பிரதி சபா­நா­ய­கரிட­மி­ருந்து தீர்ப்­பொன்றை எதிர்­பார்ப்­ப­தா­கவும் அஸ்வர் எம்.பி. தெரி­வித்தார்.
எனினும் இவ்­வி­ட­ய­மா­னது சபா­நா­ய­கரின் முன்­னி­லையில் பல தட­வை­களும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் பேசப்­பட்டு இணக்கம் காணப்­பட்­ட­தற்­க­மைய விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில் அஸ்வர் எம்.பி.யின் ஒழுங்குப் பிரச்­சினை தொடர்­பில்­லா­த­தொன்று என ஐ.தே.கட்­சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான ரவி கரு­ணா­நா­யக்க எம்.பி. சுட்டிக் காட்­டினார். இதே­வேளை ஜன­நா­யக தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலை­வ­ரான அநுர திஸா­நா­யக்க இதன் போது கருத்து வெளி­யி­டு­கையில், இவ்­வி­டயம் தொடர்­பாக கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் 3 தட­வை­க­ளுக்கும் அதி­மாக பேசப்­பட்­டுள்­ளது. அவற்றில் சபை முதல்வர், ஆளுந்­த­ரப்பு பிர­தம கொறடா இரு­வரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். வடக்கு மக்­களின் காணி பிரச்­சி­னைகள் பற்றி பேசு­வது தொடர்பில் ஆளுந்­த­ரப்பில் எவரும் அதன் போது ஆட்­சேபம் வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை.
எனவே வழக்­குகள் தொடர்­பு­பட்ட விட­யங்கள் அல்­லது ஏனைய காணி பிரச்­சி­னை­களை பற்றி நாம் இங்கு பேச முடியும். ஆகையால் இந்த பிரே­ர­ணையை விவா­திக்க இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று கூறினார். இந்த நேரம் பிரே­ர­ணையை கொண்டு வரு­வ­தற்கு நாங்கள் இணக்கம் வெளி­யிட்­டி­ருந்த அதே­நேரம் உறுப்­பினர் ஒருவர் சபையின் பிரே­ரணை தொடர்பில் பிரச்­சினை கிளப்­பு­வ­தற்­கான உரி­மையை மறுக்க முடி­யாது. வழங்கும் தீர்ப்வை தாங்கள் ஏற்­றுக்­கொள்ள தயா­ராக உள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.
நேற்று முன்­தினம் தான் பிரே­ர­ணையின் பிர­திகள் அர­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் கிடைத்­ததன் பின்னர் தான், அதன் உள்­ள­டக்கம் தெரி­ய­வரும் என்றும் ஆளுந்­த­ரப்பின் பிர­தம கொற­ட­வான அமைச்சர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். எனினும் இவ்­வி­டயம் பற்றி கட்சித் தலைவர் கூட்­டத்தைக் கூட்டி சுட்­டிக்­காட்டி ஆராயும் பொருட்டு சபை நட­வ­டிக்­கை­களை 10 நிமி­டங்­க­ளுக்கு இடை நிறுத்­து­வ­தாக சபைக்கு தலைமை தாங்­கிக்­கொண்­டி­ருந்த பிரதி சபா­நா­யகர் சந்­திம வீரக்­கொடி பிற்­பகல் 2.15 க்கு சபைக்கு அறி­வித்தார்.

ad

ad