புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஆக., 2013

ஜேம்ஸ்வசந்தன் மனைவியை ஏன் அரெஸ்ட் செய்யவில்லை. பார்த்திபன் கேள்வியால் அதிர்ந்த ஜேம்ஸ்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஜாமீனில் விடுதலை ஆனவுடன் அவருக்கு போனில் ஆறுதல் சொன்ன நடிகர் பார்த்திபன் இன்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்த கருத்து.
ஜேம்ஸ் வசந்தன் ஜாமீனில் வீட்டுக்கு வந்தவுட
ன் அவருக்கு போன் செய்து ஏதாவது உதவி தேவையா என கேட்டதாகவும், அதற்கு அவர் சோகத்துடன் தான் அரெஸ்ட் ஆன விதத்தை கூறிக்கொண்டே வந்தார். தன்னை அரெஸ்ட் செய்ய இன்ஸ்பெக்டருக்கு அவர் என்னை அரெஸ்ட் செய்ய வந்திருக்கின்றார் என்பதை அறியாமல் அவருக்கு தன்னுடைய ஸ்டுடியோவை சுற்றி காண்பித்ததாகவும், தன்னுடைய சவுண்ட் ஸ்டுடியோவை சுற்றிக்காட்டியதாகவும் கூறிய ஜேம்ஸ் வசந்தன், பின்னர் தன்னுடைய மனைவியிடம் இன்ஸ்பெக்டருக்கு டீ கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டாராம். டீயை குடித்த பின்னர், இன்ஸ்பெக்டர், சாரி ஜேம்ஸ்வசந்தன், நான் உங்களை அரெஸ்ட் செய்ய வந்திருக்கின்றேன் என கூறி தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும் கூறினார்.
உடனே பார்த்திபன், அவர் உங்கள் மனைவியை அரெஸ்ட் செய்வதற்கு பதில் உங்களை அரெஸ்ட் செய்துவிட்டார் என நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார். அதற்கு ஜேம்ஸ் வசந்தன் மேலும் அதிர்ச்சியாகி ஏன்? என்று பார்த்திபனிடம் கேட்க, பதிலுக்கு பார்த்திபன் “டீ கொடுத்தது உங்கள் மனைவிதானே? டீ நன்றாக இல்லையென்றால் உங்கள் மனைவியை தானே அரெஸ்ட் செய்திருக்க வேண்டும்” என பதிலளித்து தன்னுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தினாராம். அதைக் கேட்டு தன்னுடைய கவலையையும் மறந்து சிரித்து ரிலாக்ஸாகிவிட்டாராம் ஜேம்ஸ் வசந்தன்.

ad

ad