புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2013

சுடர்ஒளி ஆசிரியர் சிவராசா ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆனார். 
தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 வீரகேசரி பத்திரிகையில் செய்தியாளராக  1996 ஆம் ஆண்டு தனது ஊடகப்பணியை ஆரம்பித்த சிவராஜா, மகாராஜா நிறுவனத்தின் சக்தி தொலைக்காட்சி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனம் என்பனவற்றில்   அரசியல் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார்.
அதன் பின்னர் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியராக இதுவரை கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளரான சிவராஜா, இலங்கை பத்திரிகை ஆசிரியர் பேரவை மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
களுத்துறை இங்கிரியவையை பிறப்பிடமாக கொண்ட இவர் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

ad

ad