புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2013



சாலையில் போகும்போது மனைவியுடன் சண்டை: ஆற்றில் மகளை வீசி கணவன் தற்கொலை: குழந்தை மீட்பு 
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அகஸ்தியன். இவரது மனைவி விமலாராணி. இவர்கள் இருவரும் திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை மலர் மருத்துவமனை அருகில் உள்ள அடையாறு ஆற்று நடைபாதையில் பேசியபடி சென்றனர். பெண்
குழந்தைகளும் அவர்களுடன் நடந்து வந்தனர்.
திடீரென கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இதல் ஆத்திரம் அடைந்த அகஸ்தியன் தன்னுடைய 4 வயது பெண் குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்தார். 9 வயது பெண் குழந்தையையும் ஆற்றில் தூக்கி எறிய முயன்றார். ஆனால், விமலாராணிய குழந்தையை இறுக்கமாக கட்டிப் பிடித்துக்கொண்டு கதறி அழுதார். 
ஆத்திரம் அடங்காத அகஸ்தியன் மனைவி, மகள் இருவரையும் கீழே தள்ளியதில், கீழே விழுந்த விமலாராணியின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து பயந்துபோன அகஸ்தியன் உடனே ஆற்றில் குதித்தார். இதைப் பார்த்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் உடனே தகவல் கொடுத்தனர். 
அகஸ்தியன் 2வது மகள் ஆற்றில் மிதப்பதைப் பார்த்து மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர், உடனே ஆற்றில் குதித்து அக்குழந்தையை உயிருடன் மீட்டார். ஆற்றில் குதித்த அகஸ்தியன் உடலை தீயணைப்புத்துறையினர் தேடினர். 
காயம் அடைந்த விமலாராணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அகஸ்தியன். இவரது மனைவி விமலாராணி. இவர்கள் இருவரும் திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் சென்னை மலர் மருத்துவமனை அருகில் உள்ள அடையாறு ஆற்று நடைபாதையில் பேசியபடி சென்றனர். பெண் குழந்தைகளும் அவர்களுடன் நடந்து வந்தனர். 
திடீரென கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். இதல் ஆத்திரம் அடைந்த அகஸ்தியன் தன்னுடைய 4 வயது பெண் குழந்தையை ஆற்றில் தூக்கி எறிந்தார். 9 வயது பெண் குழந்தையையும் ஆற்றில் தூக்கி எறிய முயன்றார். ஆனால், விமலாராணிய குழந்தையை இறுக்கமாக கட்டிப் பிடித்துக்கொண்டு கதறி அழுதார். 
ஆத்திரம் அடங்காத அகஸ்தியன் மனைவி, மகள் இருவரையும் கீழே தள்ளியதில், கீழே விழுந்த விமலாராணியின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து பயந்துபோன அகஸ்தியன் உடனே ஆற்றில் குதித்தார். இதைப் பார்த்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் உடனே தகவல் கொடுத்தனர். 
அகஸ்தியன் 2வது மகள் ஆற்றில் மிதப்பதைப் பார்த்து மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர், உடனே ஆற்றில் குதித்து அக்குழந்தையை உயிருடன் மீட்டார். ஆற்றில் குதித்த அகஸ்தியன் உடலை தீயணைப்புத்துறையினர் தேடினர். 
காயம் அடைந்த விமலாராணி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ad

ad