வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் அமைதியான முறையில் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
நேற்று ஆரம்பமான தபால் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் இடம்பெற்றது.
இன்றும், நேற்றும் வாக்களிக்க தவறிய அரச உத்தியோகத்தர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு சென்று, தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்களிக்க முடியுமென பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.