தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இவ் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
இக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்க உள்ள
சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவருகின்றது.
இதில் வடக்கு மாகாண சபைக்கான பதவிப்பிரமாணம் செய்வது, போனஸ் ஆசனங்கள், அமைச்சர்கள் உட்பட பல விடயங்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.