புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2014


சென்னை கட்டிட விபத்து; பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
சென்னை போரூர் சந்திப்பு அருகே, புதிதாக கட்டப்பட்டு வந்த 11 மாடிகளை கொண்ட இரு அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்து
தரைமட்டமானது. கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

நேற்றிரவு மட்டும் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும், 37 பேரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
காயமடைந்த 22 பேரில் 21 பேர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும், ஒருவர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
நேற்றிரவு முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருவதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது

ad

ad