பழ.நெடுமாறன் தலைமையில் 'தமிழர் தேசிய முன்னனி' புதிய கட்சி தொடங்கம்
தமிழ் தேசிய அமைப்புகளை ஒருங்கிணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் பழ.நெடுமாறன் போன்ற தமிழ்தேசிய உணர்வாளர்கள் இறங்கினார்கள். அதன் முதல்கட்டமாக கடந்த 11ந் தேதி சென்னையில் சுமார் 25 பேருடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் உள்ள தமிழ் தேசிய அமைப்புகளில் திராவிடக் கொள்கை இல்லாத அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய சிந்தனையுள்ள அமைப்புகள், ஈழத்திற்காக போராடிய மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு கடந்த 20ந் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் என்று சுமார் 650 பேருக்கு நெடுமாறன் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினார். அரசியல் தலைமையகமான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்த கடிதத்தில் ஜூன் 29ந் தேதி காலை தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ் தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய ஆலோசனை நடத்துவது என்றும் மாலை 2வது அமர்வில் புதிய கட்சிக்கு பெயர் வைப்பது, கட்சிக்கு கொடி உருவாக்குவது, கொள்கைள் விளக்குவது என்பது பற்றியும் ஆலோசனைகள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. ஆலோசனைக் கூட்டத்தில் கூடங்குளம் உதயகுமார், இயக்குநர் கௌதமன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் அழைப்பு கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. ஆலோசனைக் கூட்டத்தில் கூடங்குளம் உதயகுமார், இயக்குநர் கௌதமன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் அழைப்பு கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு அனுமதி இல்லை.
உளவுத்துறையினர் ஊடுருவிவிடாதவாறு கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புகளின் புதிய கட்சியாக தமிழர் தேசிய முன்னனி என்ற புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்பட்டது.