புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2014

இந்திய மீனவர்கள் 11 பேரும் விடுதலை 
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11பேரும்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த 24ஆம் திகதி இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த குறித்த மீனவர்கள் இன்று நீதிமன்ற நீதவான் லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த 11பேரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad