புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2014


போர்க் கப்பலில் பயணம் செய்யவுள்ள நரேந்திர மோடி

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான போர்க்கப்பலில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்யவுள்ளார். 
சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட
விக்ரமாதித்யா போர்க்கப்பல் 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டதாகும். இதில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்று எதிரியின் இலக்கை தாக்கி அழித்து விட்டு, மீண்டும் இதே கப்பலில் வந்து தரையிறங்கும் வசதி உள்ளது.

தற்போது, கோவா கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விக்ரமாதித்யா கப்பலுக்குள் சனிக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கும் பிரதமர் மோடி, கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டபடி, சிறிது நேரம் பயணம் செய்கிறார்.
சாகச நிகழ்ச்சியை பார்வையிட்ட பின்னர், கப்பலில் இருந்தவாறே கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்களிடையே மோடி உரையாற்றுகிறார்.

ad

ad