புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூன், 2014




லைநகரம் டெல்லியில் இப்படியொரு காமக்கொடூரன் இருந்திருந்தால் அவனுக்கு எதிராக நாடே கொந்தளித்திருக்கும். மகளிர் அமைப்புகள் பொங்கி எழுந்து போர்க்கொடி தூக்கி போராடியிருக்கும். ஆனால், தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருப்பதால் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும் மகளிர் அமைப்புகளும். 19 வயதைக்கூட தாண்டாதவன். ஆனால், 30-க்கு மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையில் விளையாடிவிட்டான்.  அதுவும் இவன் விளை யாடியது விபரீத விளையாட்டு. இணையதளங்களி லும் சி.டிக்களிலும் உலாவும் இளம்பெண்களின் அந்தரங்க வீடியோக்கள்  மனதை பதறவைக்கும். இந்தமாதிரி வீடியோக்களில் இளம்பெண்கள் -மாணவிகள் எப்படி சிக்கிக்கொள்கிறார்கள் என்று கோபம் கொப்பளிக்கும். அது இப்படித்தான் என்று அம்பலமாகியிருக்கிறது இந்த பொறுக்கி யால். அதுவும் இவனது விபரீத விளையாட்டுக்கு இவனது தாயும்... ஆளுங்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் ஒருவரும் துணையாக இருந்திருப்பது தான் அதிர்ச்சிக்குரிய தகவல். 

இளம்பெண்களையும் மாணவிகளையும் எப்படி காதலிப்பதுபோல் நடித்து ஏமாற்றினான்?  இளம்பெண்களை ஆபாசவீடியோ எடுத்தது எப்படி? அவனது நெட்வொர்க் என்ன? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளுக்கு... அவ னிடம் ஏமாந்து அந்தரங்க வீடியோவில் சிக்கிய ரெஜினா என்ற இளம்பெண் நம்மி டம் பதில் சொல்லத்தொடங்க, "நான் அவன் இல்லை...', "மன்மதன்...' சினிமாக் களையே ஓவர்டேக் பண்ணுகிறது அந்த ஹைடெக் ஆணின்  ஃப்ளாஷ்பேக்! 



""அவன் பெயர் பொன்சிபி. அவனால என்னோட வாழ்க்கை மட்டுமல்ல... ஏகப்பட்ட பெண்களோட வாழ்க்கை சீரழிஞ்சிபோச்சி. என்னோட சொந்த ஊர் மதுரை. பி.காம் படிச்சிருக்கேன். என்னோட அக்கா ஊரான திண்டுக்கல் மாசிலாமணிபுரத்துக்கு அடிக்கடி வரு வேன். அப்படியொரு நாள் அக்கா வீட்டுக்கு வந்தப் போ டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு போயிட்டு வரும்போது ஒரு பைக் என்னை பின் தொடர்ந்து ஃபாலோ-அப் பண்றதைப் பார்த்தேன். நான் இப்படி வெளியில போகும்போதெல்லாம் அந்த பைக் என்னை பின் தொடர்ந்து வரும். டூவீலரை ஸ்பீடா ஓட்டிக் கிட்டுவந்து சாகசங்கள்லாம் செய்வான்.  பார்க்கிற துக்கு ரொம்ப அழகாவும் ஸ்டைலாவும் இருந்தான். ஆனாலும், நான் கண்டுக்காம வந்துடுவேன். ஆனா, அப்படித்தான் ஒருநாள்  பைக்ல என்கிட்ட வந்தவன், "உங்க அக்கா வீட்டுப் பக்கத்துலதான் இருக்கேன். உன்னைப் பார்த்தவுடனே புடிச்சிப்போச்சி. உங்களை நான் லவ் பண்றேன்'னு சொல்லி ரொம்ப ஆசை வார்த் தைகளை பேசினான். அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு  மதுரையி லுள்ள என் வீட்டுக்கு வந்துட்டேன்.  

ஆனா, என் னைத் தேடிக்கிட்டு மதுரைக்கு வருவான்னு நினைச்சுக்கூடப் பார்க்கல. "உன்னை  சின்சியரா லவ் பண்றேன். உனக்காக என்னோட உயிரையே கொடுப் பேன். நீ நம்பலைல்ல... இங்க பாரு'ன்னு சொன்னவன் டக்குனு தன்னோட கையை கிழிச்சிக்கிட்டு... " நீ மட்டும் என்னை லவ் பண்ணலைன்னா நான் செத்துப் போய்டு வேன்'னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டான்.  இந்தளவுக்கு என்னை லவ் பண்றானேன்னு அவனோட காதலுக்கு ஓகே சொல்லிட்டேன். அடிக்கடி செல்ஃபோன்லயே பேசி ரெண்டு பேரும் ரொம்ப சின்சியரா லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம். எங்க அம்மாக்கிட்ட உன்னை அறிமுகப்படுத்துறேன்னு என்னை  மதுரையிலிருந்து திண்டுக்கல்லில் இருக்கும் அவனோட வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனான். நானும் அவங்க அம்மாவைப் பார்க்க சந்தோஷமா போனேன். ஆனா, வீட்டுல அவங்க அம்மா இல்ல. அம்மா எங்கன்னு கேட்டதுக்கு இன்னும் கொஞ்சநேரத்துல வந்துடுவாங்கன்னு சொன்னவன் பெப்சி கொண்டுவந்து கொடுத்தான். அதைக் குடிச்சதுமே எனக்கு மயக்கம் வர ஆரம்பிச்சிடுச்சி (எத்தனை ஆண்டு களுக்குத்தான் பெண்கள் இப்படியே ஏமாறுவீங்களோ?) திடீர்னு என்னை சிபி அலக்காக மொட்டை மாடிக்கு தூக்கிட்டுப் போய்ட்டான். டேய் என்னடா பண்றன்னு நானும் உளறுறேனே தவிர... என்னால அவனைத் தடுக்க முடியல. அந்த வெறி பிடிச்ச மிருகம், தன்னோட வெறியை தீர்த்துக்கிட்டுத்தான் அமைதியானது. கொஞ்ச நேரத்துல கண்ணைத் திறந்துப் பார்த்தா''’’-ரெஜினாவின் கண்கள் குளமாகிறது. ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பிக்கிறார். ""என்னோட நிலைமை வேற எந்தப் பொண்ணுக்கும் வரக்கூடாதுங்க. அதனாலதான் வெட்கத் தைவிட்டு வெளியில சொல்றேன். திருமணத்துக்கு முன்னால எது நடக்கக்கூடாதுன்னு பொத்தி பொத்தி வெச்சிருந்தேனோ அது பறிபோயிடுச்சி. உடம்புல ஒட்டுத் துணிகூட இல்லாம அப்படியே கிடந்தேன். என்னை நினைச்சி நானே நொந்து அழுதேன். புலம்பினேன். "நாமதானே கல்யாணம் பண்ணிக்கப்போறோம்? அதுக்கு ஒரு ஒத்திகைதான் இது'ன்னு சொல்லி என்னை சமாதானப் படுத்தினான். 

அதுக்கப்புறம், மதுரையில இருக்கும்போது அதேமாதிரி இருக்க வீட்டுக்கு கூப்பிட்டான். "ஏற்கனவே, ஒரு தடவை கூட்டிக்கிட்டுப்போயி தப்பா நடந்துருக்க. திரும்பவும் என்னால  ‘அதுக்கு’ வரமுடியாது. எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்'னு சொல்லி மறுத்தேன்.  ஆனா, அவன் செல்ஃபோனிலுள்ள வீடியோ காட்சியை காண்பித்து ப்ளாக்மெயில் பண்ணினான். அந்த வீடியோவைப் பார்த்தபோது என் இதயமே வெடிக்கிறமாதிரி இருந்துச்சு. உண்மையா காதலிக்கிற எவனும் இப்படியொரு செயலை செஞ்சிருக்கமாட்டான். அந்த வீடியோவில் இருந்தது அவனும் நானும் ஒண்ணா  இருக்கும்போது படம் பிடிக்கப்பட்டக் காட்சிதான் அது. "இந்த வீடியோவை நெட்ல விட்டா என்ன ஆகும்னு தெரியுமில்ல... ஒழுங்கா நான் சொல்றதை கேட்டு  நடந்துக்கோ'’என ப்ளாக்மெயில் பண்ண ஆரம்பிச்சுட்டான். இதை வைத்தே அடிக்கடி அவன் இஷ்டத்துக்கு ஆசையை தீர்த்துக்கிட்டான்.  இதனால், ஒருகட்டத்துல நான் கர்ப்பமாகிட்டேன். 

சிபிக்கிட்ட சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சினேன்.  ஆனா, கல்யாணம் பண்ணிக்கமுடியாதுன்னு சொல்லிட் டான்.  இதுக்குமேலயும் இவனை சும்மா விடக்கூடாதுன்னு தான் திண்டுக்கல் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அனார்கலியிடம் புகார் கொடுத்தேன். சிபியை வர வழைத்து ஸ்டேஷன்ல விசாரித்த இன்ஸ்பெக்டர் "உனக்கு 21 வயசாகுது. அவனுக்கு 19 வயசுதான் ஆகுது. அதனால சட்டப்படி உனக்கு அவனை திருமணம் செய்துவைக்க முடியாது'ன்னு சொல்லிட்டாங்க. அடப்பாவி இத்தனை நாளும் 26 வயசாகுதுன்னு சொல்லி ஏமாத்திட்டியேன்னு திட்டினேன்.  வெளியில் தெரிந்தால் ஆபத்து என்று நினைத்த சிபி திண்டுக்கல் மலைக்கோட்டை பெருமாள் கோயிலுக்கு கூட்டிக்கிட்டுப்போயி நண்பர்கள் முன்னிலையில் எனக்கு தாலிகட்டினான். (இதோ பாருங்க ஃபோட்டோ என்று ஆதாரத்தை நம்மிடம் காண்பித்தார்) அதுக்கப்புறம் மூன்றுமாதம் சுமுகமா வாழ்ந்துக்கிட்டிருக்கும் போதுதான் திடீரென அவனது அம்மா வந்தாங்க. "ஏண்டா... இவளை எப்படிடா கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த'ன்னு சாதி பேரைச் சொல்லி அசிங்க அசிங்கமா திட்டினவங்க... "ஒண்ணு இவளை வீட்டுக்கு அனுப்பிடு. இல்லைன்னா அப்பாவை கொன்ன மாதிரி இவளையும் கொன்னு  ரயில் தண்டவாளத்துல போட்டுடு'ன்னு சொல்ல...  அதிர்ச்சி ஆகிட்டேன்'' என்று வேதனை யுடன் சொன்ன ரெஜினா... கொலைக்கான காரணத்தைச் சொல்ல நமக்கே ஷாக்காகத்தான் இருந்தது.

""சிபியோட அம்மா ஹேமமாலினிக்கும் அவருடைய உறவினரான தேனி உப்பார்ப்பட்டியைச்  சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னுப்பிள்ளையின் மகன் ராஜா என்கிற ஞானராஜுக்கும் கள்ளத்தொடர்பு இருந்திருக்கு. ஒருநாள் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும்போது சிபியோட அப்பா சங்கர்தாஸ் பார்த்துட்டு பயங்கரமா பிரச்சினை பண்ணினார். இதனால் கள்ளக்காதலன் ராஜா, சிபியோட அம்மா ஹேமமாலினி, சிபி மூணு பேரும் சேர்ந்து அவனோட அப்பா வை கொலைபண்ணி ரயில்தண்ட வாளத்துல போட்டுட்டு தற்கொலை வழக்கா மாற்றிட்டாங்களாம். அது மட்டுமல்ல... ஒருநாள் அவனோட நண்பர்களான கபிலன், தினேஷை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்து அவ னுங்களோட ஆசைக்கு சம்மதிக்கச் சொல்லி வற்புறுத்தினான்.  முடி யாதுன்னு மறுத்து... "அடப்பாவி கல்யாணம் பண்ணின உன் மனைவி யையே இப்படி அடுத்தவனுக்கு கூட்டிக்கொடுக்கிறியே நீயெல்லாம் மனுஷனாடா'ன்னு  கதறி கண்ணீர் விட்ட நான், அவனை திட்ட... "நான் சொல்றதையா கேட்க மாட்ற'ன்னு சொல்லி மாடியி லிருந்து கீழ தள்ளிவிட்டுட்டான். இதனால, எனக்கு வயித்துல இருந்த கரு கலைஞ்சிபோயிடுச்சி''’ என்று கலங்கும் ரெஜினாவின் கண்களில் தாய்ப்பாசம் கண்ணீராக வழிகிறது. தண்ணீர் குடித்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசத்தொடங்கினார். 

""அப்போதுதான், இந்த சிபி  பெண்களை ஏமாற்றும் வெறும் மன்மதன் மட்டுமல்ல என்பது தெரியவந்தது. மதுரைக்குப் போய் உடம்பை சரிபண்ணிக்கிட்டு சிபி யைப் பார்க்க வந்தேன். பஸ் ஸ்டாண்டில் சிபியினுடைய நண்பன் அருண் என்னைப் பார்த்து, "நீ இப்போ சிபியோட வீட்டுக்குப் போகாத. போனா உன் மனசு தாங் காது'ன்னு சொன்னான். நான் பதறியடிச்சுக்கிட்டு சிபியோட வீட்டுக்கு ஓடினேன். வீட்டுக்குள்ள என்னை நுழையவிடாம தடுத்தான் சிபியோட நண்பன் கஜா. அதையும் மீறி மாடிக்கு போனபோதுதான் அப்படியொரு வேதனையான காட்சியைப் பார்த்தேன். சிபி ஒரு பொண்ணோட -அதுவும் ப்ளஸ்டூ படிக்கிற எக்சிபாங்குற ஒரு ஸ்கூல் பொண்ணோடு ஒண்ணா இருக்கிற தைப் பார்த்துட்டு என் இதயமே நொறுங்கிப்போச்சி.  "படிக்க வேண் டிய வயசுல என் புருஷன் கூடயாடி வந்து கூத்தடிக்குற?' ன்னு கோபத் துல அவளை அடிக்கப் போனேன். என்னை அடிச்சி கீழ தள்ளிட்டு, டூவீலர்ல கிளம்பிட்டா. "நீ எல்லாம் படிச்சி எங்கடி உருப்படப் போற'ன்னு திட்டி அனுப்பிட்டேன்.   இப்போ காலேஜ் படிக்கிறா.  

இதேமாதிரிதான் கல்லூரி மாணவி ஜெயப்பிரதாங்குற பெண்ணை ஏமாத்தியிருக்கான். நீங்களே அவளிடம் பேசிப்பாருங்க'' என்று ரெஜினா நம்மிடம் சொல்ல, நாம் ஜெயப்பிரதாவை தொடர்புகொண்டோம். “""அவ மனரீதியா ரொம்பவே பாதிக்கப் பட்டிருக்கா. அவளுக்கு நடந்த கொடுமையை நானே சொல்றேன்'' என்றபடி அவரது உறவினர் நம்மிடம் பேசினார். 

""பொம்பளப் பொறுக்கி சிபியின் தாத்தா வீடு திருச்சியில் இருக்கு.  அங்க வரும்போதுதான் காலேஜ்ல படிச்சிக்கிட்டிருந்த ஜெயப்பிரதாவுக்கு காதல் வலைவீசி எப்படியோ மயக்கிட்டான். அடிக்கடி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயி தப்பா நடந்திருக்கான். ஆனா, ஒருநாள் அவன் செஞ்சது நெஞ்சை பதறவைக்கும் செயல். ஜெயப்பிரதாவோடு அந்தரங்கமா இருக்கும்போது நண்பர்களான கபிலன், தினேஷ், கஜா மூணு பேரும் வீடியோ எடுத்திருக்கானுங்க. இதைப்பார்த்து அதிர்ச்சியான ஜெயப்பிரதா போட்டிருந்த உள்ளாடைகளோடு தப்பிச்சு ஓடிவந்து அந்த ஏரியாவுல இருக்கிற ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்து துணி வாங்கிப்போட்டுக்கிட்டு வீடு வந்து சேர்ந்திருக்கு. வெளியில சொன்னா அசிங்கம்னு விட்டுட்டோம். ஆனா, எங்க பிள்ளையை மட்டுமில்ல, ஏகப்பட்ட பெண்களை இப்படி வீடியோ எடுத்து நாசம் பண்ணியிருக்கானுங்க. ஆனா, போலீஸு எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்கிறதுதான் வேதனையா இருக்கு''’ என்கிறார் குமுறலோடும் ஆதங்கத்தோடும்.

ரெஜினா நம்மிடம் “""பார்த்தீங்களா சார்... இதுமட்டு மில்ல திருச்சியில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி அனுசுயாவையும் இப்படித்தான் காதல் வலைவீசி நாசம் பண்ணியிருக்கான்.  இவன் நாசம் பண்ணினதும் இவனோட நண்பர்களுக்கும் விருந்து வெச்சிருவான். மறுத்தா... அந்த பெண்களுக்கு தெரியாம எடுத்த ஆபாச வீடியோவை நெட்ல விட்டுடுவேன்னு மிரட்டுவான். இதுல என்னக் கொடு மைன்னா... மகாலட்சுமி, சித்ராங்குற ரெண்டு பெண்களை சிபி மற் றும் நண்பன்களான தினேஷும் கபிலனும் பெங்களூருக்கு கூட்டிட் டுப் போயி விபச்சார புரோக்கர்கிட்ட வித்திருக்கானுங்க. அந்தப் பொண்ணுங்க  வாடிக்கையாளர் ஒருத்தர்கிட்ட அழுது கெஞ்சி தப்பிச்சிருக்காங்க. இப்படி 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இவனோட வலையில் வீழ்ந்திருக்காங்க. எல்லாமே சின்னச் சின்னப் பிள்ளைங்க. எல்லோரையும் வீடியோ எடுத்து வெச்சுக்கிட்டு இப்படி ப்ளாக் மெயில் பண்றான். மாணவிகளின் அந்தரங்க வீடியோக்கள் எல்லாமே சிபியோட நண்பன் கபிலன்கிட்ட இருக்கு. இன்னும் சொல்லப்போனா கபிலனோட மனைவியே சிபியோடு நெருக்கமாகத் தான் இருக்கா. 

"இவ்வளவு பெண்களை ஏமாற்றிய பொம்பளப் பொறுக்கி சிபிமேல் நடவடிக்கை எடுங்க'ன்னு இன்ஸ்பெக்டர் இளங்கோவ னிடமும் ஜெயராணியிடமும் புகார் கொடுத்தேன். ஆனா, ஆளுங்கட்சி அரசியல் புள்ளிகளிடமிருந்து சிபிக்கு சப்போர்ட்டா ஃபோன் வர்றதாலயும் பணக்கார சிபியோட அம்மாவின் கவனிப்பாலயும் போலீஸ் நடவடிக்கை எடுக்காம அவங்களுக்கு கைக்கூலியா மாறிடுச்சி. அதற்குப் பிறகு சென்னையிலுள்ள தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி டாக்டர் விசாலாட்சிகிட்டயும், எஸ்.பி. ஜெயச்சந்திரனிடமும் புகார் கொடுத்தேன். இன்னும் எந்த நடவடிக்கையும் அவன்மேல எடுக்கல. என்னை மாதிரி வேறு எந்த பெண்ணுக்கும் இந்த நிலைமை ஏற்படக்கூடாதுன்னுதான் போ லீஸ்ல புகார் கொடுத்து போராடிக் கிட்டிருக்கேன். என்னை எவனும் ஒண்ணு பண்ணமுடியாதுன்னு வாட்ஸ்-அப்ல திமிரா எழுதிக் கிட்டிருக்கான் அந்தப் பொறுக்கி சிபி. பத்திரிகை, மீடியாக்கள்தான் இந்த காமக்கொடூரனுக்கு தண்ட னை வாங்கிக் கொடுக்கணும்''’என்று குமுறி வெடிக்கிறார் பாதிக்கப் பட்டப் பெண் ரெஜினா.

சிபிக்கு நெருக்கான மாணவி எக்சிபாவிடம் பேசியபோது, “""அவனை நல்லவன்னு நினைச்சு ஏமாந்துட்டேன்.  இப்படியிருப் பான்னு நினைச்சுக்கூட பார்க்கல. என்னோட ஃப்ரண்டு மூலமா அவன் எனக்கு பழக்கமானான். மூன்றுமுறை அவன் வீட்டுக்கு போயிருக்கேன். அப்போதான் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அனுசா என்னை ஃபோனில் தொடர்புகொண்டு "நான் சிபியை காதலிக்கிறேன் (விளங்கிடும்!) நீ எந் தத் தொடர்பும் வெச்சுக்காத'ன்னு சொன்னா. அதுக்கப்புறம் சிபிக் கிட்ட எந்தத் தொடர்பும் வெச்சுக்கல. இது என்னோட அப்பாவுக்கு தெரிஞ்சு ரொம்பவே திட்டினாரு. அந்த நாயைப் பற்றி இதுக்குமேல என் னால எதுவும் பேசமுடியாது''’’ என்று அழுதபடி ஃபோனை துண்டித்தார்.

""உன் குடும்பத்து பெண்களை இப்படி எவனாவது வீடியோ எடுத்தா சும்மா இருப்பியா?'' சிபியின் நண்பன் கபிலனிடம் கேட்டபோது, “""நான் காதலித்து திருமணம் செய்துகொண்டதால் சிபியோட வீட்டுல மூணு மாசம் தங்கியிருந்தேன். ஒருநாள் பொன்ராம் பிரியாணி ஹோட்டலில் சாப்பிடப்போனப்ப சிபியோடு நெருக்கமா உட்கார்ந்து கேஷுவலா பேசிக்கிட்டிருந்தா என் மனைவி. அதை ரெஜினா தவறாக நினைச்சி அசிங்கப்படுத்துறா. பல பெண்களோடு சிபி இருக்கும் அந்தரங்க வீடியோவை அவனது செல்ஃபோனில் பார்த்திருக்கேனே தவிர எங்கிட்ட எந்த வீடியோவும் இல்லை''’’என்கிறார் கபிலன். 

திண்டுக்கல்லிலுள்ள சிபியின் வீடு இருக்கும் பாலகிருஷ்ண புரத்தில் விசாரித்தால் தலையில் அடித்துக்கொண்டு சொல் கிறார்கள், “""அவனோட அம்மா ஹேமமாலினி வேற ஒருத்தவன் கூட கள்ளக்காதல் வெச்சுக்கிறதால இவனை கண்டுக்கிறதே இல்ல. அதுவும், அவளோட கில்லாடித்தனம், அப்பாவின் மர்ம மரணம் பற்றியெல்லாம் இந்த பயலுக்கு தெரியும்ங்கிறதால இவன் எந்த தப்பு செஞ்சாலும் கண்டிக்கிறதில்ல. வேணும்ங்கிற தேவைக் கதிகமா பணத்தை கொடுத்துட்டு அவ கள்ளக்காதலனோடு வாழ்ந்துக்கிட்டிருக்கா. அவனோட பைக் மட்டுமே 1 3/4 லட்ச ரூபாய்ன்னா பார்த்துக்கோங்களேன். ஆள் பார்க்குறதுக்கு அழகா இருக்கிறதால பொண்ணுங்க ஈஸியா வலையில விழுந்துட்டாங்க.  பணத்தை தண்ணியா செலவுபண்ணி பல பெண்களோடு ஜாலியா இருந்ததோடு வீடியோவும் எடுத்துருக்கான். எப்போ பார்த்தாலும் இந்த வீட்டுக்கு பொண்ணுங்க வந்து போயிக் கிட்டிருப்பாங்க. கொடுமை என்னன்னா ஸ்கூல் பொண்ணுங்கக் கூட வந்துபோவாங்க.  இப்போதான் தெரியுது. அவன் வீட்டை ஒரு ப்ளூ ஃபிலிம் எடுக்கிற இடமாவே மாத்தி வெச்சிருந் திருக்கான்''’என்கிறார்கள் டென்ஷனாக.

"புகார் கொடுக்கும் பெண்களை மிரட்டுகிறீர்களே ஏன்?' பொன்சிபியின் அம்மாவின் கணவன் என்று சொல்லப்படுகிற ராஜா என்கிற ஞானராஜிடம் பேச அவரது செல் நம்பரில் தொடர்புகொண்டும், லைனில் பிடிக்க முடியவில்லை.  இத்தனை பெண்களை காதல் வலை வீசி வீடியோ எடுத்தது ஏன்? பொன் சிபியை 9500521956 மற்றும் 9500301309 ஆகிய செல்நம்பர்களுக்கு தொடர்புகொண்டோம். அவரும், லைனில் கிடைக்கவில்லை. 

""இவ்வளவு கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. இன்னும் அவனை பிடித்து ஜெயிலில் போடாமல் என்ன செய்கிறீர்கள்?'' திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரனிடம் கேட்டோம்.  “""ரெஜினா கொடுத்த புகாரை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு ஃபார்வேர்டு பண்ணியிருக்கேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். பாதிக்கப் பட்ட பெண்கள்  தைரியமா புகார் கொடுத்தால் அவர்களது பெயர்கள், புகைப்படங்கள் ரகசியம் காக்கப்படும்''’என்கிறார் உறுதியாக. தமிழ்நாடு மகளிர் ஆணையத்துக்கு 044-28592750 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு கேட்டபோது ""விரைவில் நடவடிக்கை எடுப்போம்''’என்றார் அந்த அலுவலகப் பெண்மணி. 

பணம்... ஹைடெக்கான லைஃப்... அழகானத் தோற்றம்... இதை எல்லாம் வைத்துதான் பெண்களை ஈஸியாக தனது வலையில் வீழ்த்தியிருக்கிறான் சிபி. பெண்களை ஏமாற்றும் விழிப்புணர்வு சினிமாக்கள்... செய்திகள்... இப்படி எத்தனை வந்தாலும் ஏமாறுகின்ற பெண்கள் இப்படி ஏமாந்து வாழ்க்கையை தொலைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

ad

ad