புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2014

ஓமந்தை வரை சென்ற எனது மகளை காணவில்லை
முள்ளிவாய்க்காலிலிருந்து ஓமந்தைவரை வந்து இராணுவத்திடம் பதிவுசெய்துகொண்ட எனது 14 வயது மகள் இன்று வரை எங்கே என்று தெரியாது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் விசாரணையின் போதே அவர் இவ்வாறு சாட்சிய மளித்தார்.

தாயாராகிய விக்கினேஸ்வரன் ரஞ்சினி தொடர்ந்து சாட்சியமளிக்கையில், நான் செட்டிகுளம், தட்டான் குளத்தில் இருக்கின்றேன்.

மகள் லக்சி முள்ளியவாய்காலில் எனது அம்மாவுடன் தங்கி நின்று படித்தவள். அங்கு வைத்து 2008 ஆம் ஆண்டு எனது மகளை புலிகள் பிடித்துச் சென்றுவிட்டார்கள்.

இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் இராணுவத்திடம் வந்த போது எனது மகளும் வந்துள்ளாள்.

அவளை ஓமந்தையில் எமக்கு தெரிந்த ஒருவர் கண்டு கதைத்துள்ளார்.
எனது மகளை அவர் தன்னுடன் வருமாறு அவர் கேட்டபோது, எனது தலை முடி வெட்டப்பட்டுள்ளது.

நான் வந்தா உங்களுக்கு தான் பிரச்சினை. நான் இராணுவத்திடம் பதிகிறேன் என மகள் கூறினார் என்று அவர் என்னிடம் சொன்னார்.

அதன் பின் எனது மகளை பல இடங்களில் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவிடமும், எனது மகள் ஓமந்தையில் நின்றது தொடர் பான பதிவுகள் உள்ளன.

ஆனால் அவர்களும் எனது மகள் இப்போது எங்கே இருக்கிறாள் என்று தெரியாது என்கிறார்கள். எப்படியாவது என் பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள் என்றார். 

ad

ad