புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2015

முன்னாள் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளரிடம் விசாரணை


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான ரொஹான் வெலிவிட்டவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்தவின் இணைப்புச் செயலாளரும் சீ.எஸ்.என் அலைவரிசையின் ஸ்தாபக பணிப்பாளருமான ரொஹானிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஊடக நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிசாந்த ரணதுங்கவிடம் நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து துரித கதியில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ad

ad