மஹிந்தவின் இணைப்புச் செயலாளரும் சீ.எஸ்.என் அலைவரிசையின் ஸ்தாபக பணிப்பாளருமான ரொஹானிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஊடக நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிசாந்த ரணதுங்கவிடம் நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து துரித கதியில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.