புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2015

போக்குவரத்து நேரசூசி வெளியிட்ட பின்னர் தவறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை ; வடக்கு அமைச்சர் டெனீஸ்வரன்

 
வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

 
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள போக்குவரத்து அமைச்சரின் அலுவலகத்தில்  அண்மையில் இடம்பெற்றது.  
 
இதன்போது, வடக்கு மாகாணத்தின் போக்குவரத்து ஒழுங்குகளை மக்களுக்கு ஏற்புடைய வகையில் வழங்குவதற்காக வழிமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
 
ஏற்கனவே இருந்து வந்த 60:40 நேர சூசிகளை மாற்றி அமைக்கும் திட்டத்தில் மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரச அதிபர்களின் தலைமையின் கீழ் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அங்கத்தவர்களைக்கொண்டதாகவும் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் பிரதிநிதித்துவத்தோடும் விசேட குழுக்கள் ஆரமிபிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே, 
 
சென்ற மாதம் அமைச்சின் செயலாளர் அவர்களால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடடு நேர சூசிக்கு அமைப்பதற்கு குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
 
எனினும் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்ட நிலையில் இலங்கை போக்குவரத்து சபையினர் தலைமைக் காரியாலயத்தில் முக்கியமான நிகழ்வுகள் இருந்தமையால் சமூகமளிக்கவில்லை.
 
அதன்பின்னர் அமைச்சர் வெளிநாடு சென்று திரும்பியவுடன் இது தொடர்பான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி  எதிர்வரும் 28ஆம் திகதி  யாழ்ப்பாணத்தில் இந்த நேர சூசிகள் இறுதி தீர்மானத்துக்கு சமர்பிக்கப்படவுள்ளது.
 
அத்தோடு குறித்த நேர சூசிகள் அமுல்படுத்திய பின்னர் இதனை மீறும் தனியார் பேருந்துகளோ அல்லது இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளோ கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad