புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2015

தேர்தல் குறித்து சந்திரிக்காவின் விசேட அறிவிப்பு இன்று

இலங்கையில் அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் இன்று
விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
தேர்தலுக்கான வேட்புமனு சந்தர்ப்பத்தில் வெளிநாட்டிலிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை வந்தவுடன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
 
இந்நிலையில், இன்று  சந்திரிக்கா முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
 
இதன்போது, ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் தெளிவுபடுத்துவார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது

ad

ad