புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2015

முகத்தை மறைக்க திரை அணியவில்லை என 5 பெண்கள் கல்லால் அடித்து கொலை ஐ.எஸ் தீவிரவாதிகள் தண்டனை




ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உடபட்ட மொசூல் நகரில் கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை கூறி அவர்களை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக  குர்தீஷ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.
கிலானி முகாமில் இருத 5 பெண்கள் தங்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என கூறி இந்த தண்டனை நிறைவேற்றபட்டு உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை அளித்து வருகின்றனர்.கடந்த ஒரு மாததிற்கு முன் ஒரு பெண் திருமணத்தின் போது கன்னி இல்லை என்பது தெரிந்ததால் அந்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யபட்டார்.முகத்தை மறைக்க திரை அணியாத பெண்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக குர்தீஷ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மொசூல் நகரில் உள்ள கிலானி முகாமில், 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக அந்த 5 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்

ad

ad