புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

ஐ.எஸ்.எல். சென்னையில் தொடக்கம்: முதல் போட்டியில் கொல்கத்தா வெற்றி! (படங்கள்)

இன்று (3ஆம் தேதி) கோலாகலமாக தொடங்கிய 2வது சூப்பர் லீக் கால்பந்து போட்டியில், கெல்கத்தா அணி 3-2 என்ற கோல் கணக்கில்
வெற்றி பெற்றுள்ளது.

சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டி கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த போட்டியின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், இரண்டாவது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் முதலில் நமது பாரம்பரிய நடனமான பரதம் நாட்டியம் நடந்தது. இதையடுத்து, கேரளாவின் பாரம்பரிய நடனம் நடந்தது.

இதைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகைகள் அலியா பட் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. இதன்பின்னர், நடிகர் ரஜினிகாந்த் கால்பந்திற்கான பந்தை, முருகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானியிடம் வழங்கினார். இதையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தலைமையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை எப்.சி அணியும், நடப்பு சாம்பியன் அணியான அல்டெடிகோ டீ கொல்கத்தா அணியும் களமிறங்கி விளையாடியது. இந்த ஆட்டத்தின் முடிவில் 3-2க்கு என்ற கோல் கணக்கில் சென்னை எப்.சி அணியை தோற்கடித்து, அல்டெடிகோ டீ கெல்கத்தா அணி வெற்றி பெற்றது.

இந்த தொடக்க நிகழ்ச்சியில், நடிகர் அமிதாப்பச்சன், கிரிக்கெட் சாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் இறுதிப் போட்டி கோவாவில் நடக்கிறது.

ad

ad