புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2015

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ரஷ்ய விமானப்படையினர் தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது

.
அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள், சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி
வந்தாலும், ரஷ்ய விமானப்படை தனது முதல் தாக்குதலிலேயே சாதனை படைத்துள்ளது.
சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமையகத்தின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், 600 தீவிரவாதிகள் சிரியாவில் இருந்து தப்பியோடிவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் கடந்த 24 மணிநேரமாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு சொந்தமான 9 முக்கிய நிலைகள் மீது ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில், ராக்காவுக்கு அருகே உள்ள ஐ.எஸ். தலைமை நிலை முற்றிலுமாக தரைமட்டமானது.
குறிப்பாக, சுகோய்-34 ரக போர் விமானங்கள் கான்கிரீட்டை பொடிப்பொடியாக்கும் பேடாப்-500 ரக குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள ராக்கா பகுதி மீது வீசியுள்ளது.

ad

ad