புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 நவ., 2015

வைகோ அழைப்பு: ஜி.கே.வாசன் பதில்



மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள்நல கூட்டணியாக உருவெடுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.   அப்போதே,  கூட்டணியில் சேருவதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து  ஜி.கே.வாசன்,   ‘’4 கட்சிகளை சேர்ந்த மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள் நலனுக்காக மட்டுமல்லாமல், தேர்தலுக்காக செயல்படும் கூட்டணி என்று அறிவித்தி ருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் எந்த கட்சிகளுடன் கூட்டணியாக செயல்பட விரும்புகிறார்கள்.   எந்த கட்சிகள் உடன் கூட்டணியாக செயல்பட விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 

த.மா.கா.வை தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகத்தை, முடிவுகளை என்னுடைய சுற்றுப்பயணம் முடிந்த பிறகே அறிவிப்பதாக முடிவெடுத் திருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

ad

ad