எனது வீடு தனிமையான காட்டுப் புறத்தில் இருந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்த இடத்தில் இருப்பதற்கு எனது மனைவி விரும்பவில்லை
. என்னுடன் மாலை வேளைகளில் எனது நண்பன் வந்து கதைத்துக் கொண்டிருந்து விட்டுச் செல்வான்.
எனது மனைவி அவனுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டு வருகின்றாள் என எனது உறவினர்கள் சிலர் எனக்குத் தெரிவித்தனர். இருந்தும் நான் நம்பவில்லை. இது தொடர்பாக நான் மனைவியிடம் கேட்ட போது மனைவி மறுத்து என்னைத் தாறு மாறாக ஏசிய போது நான் அவளிடம் மன்னிப்புக் கேட்டேன். நான் கல்குவாறி ஒன்றில் வேலை செய்கின்றேன். எனது நண்பன் விவசாய நிறுவனம் ஒன்றில் கூலித் தொழிலாளியாக இருப்பவன். ஒரு நாள் நான் கல் குவாறிக்கு வேலைக்குச் சென்ற போது அங்கு எனக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் வேலையை இடையில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தேன். அங்கே நான் கண்ட காட்சி என்னை மயக்கமடைய வைத்தது. எனது மனைவியும், எனது நண்பனும் ஆடைகள் அற்ற நிலையில் வீட்டின் வீட்டின் உட்புறக் கயிற்றுக் கட்டிலில் அந்தரங்கமாக இருந்தார்கள். உடனே நான் பதற்றப்படாது மெதுவாகச் சென்று காடு வெட்டும் கத்தியை எடுத்து வந்தேன். வீட்டினுள்ளே நான் கத்தியுடன் புகுந்த போது எனது நண்பன் என்னைப் பார்த்துவிட்டு கத்திக் கொண்டு ஓட முற்பட்ட போது அவனை வெட்டினேன். அவனது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டும் அவன் தப்பி ஓடிவிட்டான். அதன் பின்னர் நிர்வாணமாக நின்று கொண்டிருந்த மனைவி என்னைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். நான் அவளது ஆடைகளை அணியும்படி செய்தேன். அதன் பின்னர் அவளை கட்டிலில் இருக்கும் படி சொன்ன போது அவள் மறுத்தான். இருந்தும் அவளை கட்டிலில் இருக்கச் செய்த பின்னர் கத்தியால் அவளது தலையை அறுத்தேன். அதன் பின்னர் அந்தத் தலையைக் கொண்டு வந்து உங்களிடம் சரணடைந்தேன்.‘
பொலிசாரிடம் இவ்வாறு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் கணவன். வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வருட நடுப்பகுதியில் இடம் பெற்ற இந்தக் கொலைச் சம்பவத்தில் மனைவியின் தலையைக் கொய்து வீதியால் சென்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்ததும் அதற்கான காரணங்கள் வெளியாகியிருந்ததும் ஏற்கனவே அறிந்ததே. அந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது