புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது துபாயில் உள்ள 63 அடுக்கு நட்சத்திர விடுதியில் பயங்கர தீ
விபத்து ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான துபாயில் உள்ள உலக அளவிலான பெரிய கட்டிடம் ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் 20-வது மாடியின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மேலிருந்து கீழ் வரை தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டம் போல் காட்சி அளித்தது.
இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று துபாய் பாதுகாப்பு துறை தலைவர் அல்-மத்ருஷி கூறினார். மேலும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்று அவர் கூறினார். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 160 அடுக்குமாடி கட்டிடத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
விபத்து ஏற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான துபாயில் உள்ள உலக அளவிலான பெரிய கட்டிடம் ஒன்றில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் 20-வது மாடியின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மேலிருந்து கீழ் வரை தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டம் போல் காட்சி அளித்தது.
இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று துபாய் பாதுகாப்பு துறை தலைவர் அல்-மத்ருஷி கூறினார். மேலும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்று அவர் கூறினார். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 160 அடுக்குமாடி கட்டிடத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.