புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2016

13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்

வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 13) வன்புணர்வின் பின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (16) தாயார் வேலைக்கும், சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்த மாணவி 2.30 மணியளவில் தாயார், சகோதாரர்கள் பாடசாலை முடிந்து வந்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
வவுனியா வைத்தியசாலை நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி கடமை நிமிர்த்தம் கொழும்பு சென்றிருந்தமையால் நேற்று வியாழக்கிழமையே (18) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவிக்கையில்,
குறித்த மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரிடம் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளார்.
இருப்பினும் வன்புணர்வின் பின் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளது. இதனால் இக்கொலை மற்றும் வன்புணர்வு தொடர்பான விசாரணை வவுனியா பெருங்குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தின் துணையுடன் மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சடலம் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, சடலத்தை இறுதிக் கிரியையின் போது புதைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், மாணவியின் உடற்பாகங்கள் சில மேலதிக பரிசோதனைக்காக
கொழும்புக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ad

ad