புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2016

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது


ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார். குமாரசாமி தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 

மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்) நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிர்தராய் முன்பு இந்த விசாரணை தொடங்கியது. 

கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந் தவே ஆஜராகி வாதாடினார். ஊழல் கொடிய நோய்களை போன்றது. ஊழல் நாட்டின் பொருளாதாரத்தையும், சமுதாயத்தையும் பாதிக்கக் கூடியது என ஊழல் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை குறிப்பிட்டு அவர் வாதாடினார். மேலும், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை கர்நாடக சிறப்பு நீதிமன்றம் சிறப்பாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் உயர்நீதிமன்றமோ வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொண்டு 4 பேரையும் விடுவித்தது என்றும் வாதாடினார்.

வழக்கறிஞர் துஷ்யந் தவே 3 நாள்கள் வாதாடுவார் என்று கூறப்படுகிறது. இவரது வாதத்தை தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வழக்கறிஞர் வாதாடுவார். பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் வழக்கறிஞர்கள் வாதாடுவார்கள். இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் 15 நாள் தொடரும் எனவும் கூறப்படுகிறது

ad

ad