புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2016

கனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்‌ஷன் யார்? லஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி!

தமிழகத்தின் செல்லக் குரல்களுக்கான தேடல் ! - கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. யார் சூப்பர் சிங்கர் என்ற கேள்விகளுக்கு விடையாக சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்‌ஷன்.

ஆனால் இவர் புதிய போட்டியாளர் அல்ல.ஏற்கனவே ஆரோகணம் திரைப்படத்தில் இந்த வான்வெளி விடியாதோ நீர்ப்பறவையில் யார் வீட்டு மகனோ,பத்து எண்றதுக்குள்ள படத்தில் கானா கானா உள்ளிட்ட பல பாடல்களை ஏற்கனவே திரைப்படங்களில் பாடியிருக்கிறார்.
இதையெல்லாம் ஒரு நிகழ்ச்சியில் கூட சொல்லாமல் மறைத்து நள்ளிரவு வரை காத்திருந்து ஓட்டு போட்ட ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றி இருக்கிறது விஜய் டிவி. பொது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் போட்டியில் பங்கேற்ற நடுவர்களுக்கு கூடவா இது தெரியாது. இல்லை விஜய் டிவி மறைத்திருக்குமா?

போட்டி என்பது புதியவர்களுக்கானது என்ற நம்பிக்கையில் தான் மக்கள் இருக்கை நுனியில் உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சியை ரசிக்கிறார்கள்.ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிப் பெற்று மேற்படிப்பும் முடித்து நல்ல வேலையில் இருக்கும் ஒருவன் மீண்டும் அதே தேர்வில் கலந்து கொண்டு அத்தனை மாணவர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மறுபடியும் அந்த தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கினார் என்கிற செய்தி வந்தால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அப்படிதான் இருக்கிறது விஜய் டிவியின் இந்த ஏமாற்று வேலையும்.
ஆரோகணம் படத்தில் ஆனந்த் அரவிந்தக்‌ஷன் பாடியது குறித்து படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

‘’ஆனந்த் அரவிந்தக்‌ஷன் ரொம்ப திறமையானவர்.ரொம்ப சின்சியரானவர்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் பாடப் போறதா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.எனக்கும் இந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானதுனு அப்ப தெரியாது. அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன். இப்ப அவரை பத்தின செய்திகள் வருவதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் விஜய் டிவிக்கு தெரியாம நடந்திருக்காதுனு நான் நினைக்குறேன்.
ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சூப்பர் சிங்கர்னு டைட்டில் வாங்குறதுக்கு அவரோட நேரத்தையும் உழைப்பையும் கொட்டியிருக்கார். ஆனா அதெல்லாம் இன்னைக்கு ஒரு நொடியில மறைஞ்சுப் போச்சு. மக்களை மட்டுமில்ல... போட்டியாளர்களும் இப்ப பாதிக்கப்பட்டிருக்குறது வருத்தமா இருக்கு.
வெளிநாட்டில் நடந்த சமையல் நிகழ்ச்சி ஒன்றில் நான் கலந்திருக்கேன்.ஆனால் அங்கே என்னோடு போட்டியிட்டு ஒரு செஃப் வெற்றிப் பெற்றார். இதை நான் அப்பவே கண்டிச்சேன். இது போல நிறைய நிகழ்ச்சிகள் உதாரணம் சொல்லலாம்’’ என்றார் ஆதங்கத்துடன்.

ரியாலிட்டி ஷோக்கள் என்று நம்பி பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அங்கே செய்வதெல்லாம் உண்மை தானா?

ad

ad