புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2016

2 அம்மாக்களின் நடுவில் ஓ.பி.எஸ்; உருகும் ஆதரவாளர்கள்!

நிதியமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் இன்று கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் தாயை சந்தித்து நலம் விசாரித்தார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தாயார் மீது அளவற்ற பாசம் கொண்ட ஓ.பி.எஸ் இதில் அதிர்ச்சியானார். அதேசமயம்  கட்சித்தலைமைக்கும் அவருக்குமான அதிருப்தி அதிகமாகி சில சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் அதில் அப்செட் ஆன ஓ.பி.எஸ் அதை காரணமாக வைத்து கடந்த வாரம் 2 தினங்கள் தாயாருடன் தங்கி அரசியல் சர்ச்சைகளிலிருந்து ஒதுங்கியிருந்து அவரை கவனித்துக்கொண்டார்.  

இதனிடையே இன்ப அதிர்ச்சியாக கட்சித்தலைமையிடமிருந்து அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் அழைப்பு வர ஓடோடிச்சென்று ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது தன்னைப்பற்றி வரும் செய்திகளுக்கு சுமார் 45 நிமிடங்கள் அவர் விளக்கமளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு மீண்டும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேசும் குழுவில் ஒரு இடம் கிடைத்தது.
கொஞ்சம் ஆசுவாசுமான பின் இன்று மீண்டும் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம் கேள்விஎழுப்பினர். ஆனாலும் எதற்க்கும் பிடிகொடுக்காமல்  வழக்கமான புன்னகையுடனே சென்றார். 

தனது அரசியல் காலத்தின் முக்கிய காலகட்டமான இந்நேரத்தில் தன் சொந்ததாயாருக்கு உடல்நிலை சரியில்லாதது ஒருபுறம், அதேநேரம் கட்சியிலும் நெருக்கடிக்குள்ளாகி அம்மாவின் அதிருப்திக்குள்ளாகி விட்டதால் 2 அம்மாக்களுக்கிடையில் அல்லாடுகிறார் எங்கள் அண்ணன் என 'உச்' கொட்டுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ad

ad