இந்தியாவில் பாரிய தாக்குலொன்றை நடத்துவோம் என ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் ஷாயிக் அபுஇப்ராஹிம் அல்ஹனீஃப் தெரிவித்துள்ளார்.
அந்த அமைப்பின் பத்திரிகையான தபீக்கிற்கு அளித்த பேட்டியிலேயே இந்தத் தகவலை பங்களாதேஷில் செயற்படும் அப்பிரிவின் தலைவரான ஷாயிக் அபு – இப்ராஹிம் அல் – ஹனீஃப் தெரிவித்திருக்கிறார்.
மத நம்பிக்கையில்லாதவர்கள், இறைதூதரைக் கேலி செய்பவர்கள் ஆகியோரை கொன்று தீர்க்க தங்கள் வீரர்கள் தற்போது கத்தியைத் தீட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
தாங்கள் இந்தியாவைத் தாக்கத் தயாரானதும் இந்திய ஜிஹாதிகளும் தங்களுடன் சேர்ந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பி.பி.சி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.