இரட்டை இலை இதமான காற்றைத்தரும், சூரியன் சுட்டெரிக்கும் : நடிகர் சிங்கமுத்து
By பாலசுந்தரராஜ்
First Published : 03 May 2016 03:13 PM IST
சிவகாசி: அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களுக்கு இதமான காற்றைத்தரும், திமுகவின் உதயசூரியன் மக்களை சுட்டெரிக்கும் என திரைப்பட நடிகர் சிங்கமுத்து கூறினார்.
சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை ஆதரித்து சனிக்கிழமை இரவு அவர் சிவகாசி பேருந்து நிலையம் முன்பு வேனில் இருந்தபடியே அவர் தேர்தல்பிரச்சாரம் செய்த மேலும் பேசியதாவது:
தமிழகமக்களை முன்னேற்றபாதையில் கொண்டு செல்லும் ஒரே தலைவர் ஜெயலலிதாதான்.
கடந்த 5ஆண்டுகளில் அவர் தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளமானவை.
தமிழகத்தில் தற்போது மின்வெட்டு கிடையாது. தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
மீண்டும் அவர் வெற்றிபெற்று முதல்வராவார்.
இந்த தொகுதியில் முதல்வரின் நம்பிக்கைக்கு உரிய அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிடுகிறார்.
கடந்த 5ஆண்டுகளில் இந்த தொகுதியில் பல வளர்ச்சிப்பணிகளை செய்துள்ளார்.
அதிமுகவின் சின்னமான இரட்டை இலை மக்களுக்கு இதமான காற்றைத்தரும்.
தற்போது இந்தியா முழுவதும் வெயில் மக்களை வாட்டிவதைக்கிறது.அதுபோல திமுக வின் உதயசூரியனும் மக்களை வாட்டிவதைக்கும்.
எனவே வாக்காளர்கள் அனைவரும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றார்.