புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2018

2017 - 2018 பல்கலைக்கழக கற்கை நெறிக்கான வெட்டுப்புள்ளிகளை அறிவிக்க மேலும் 3 மாதகாலம்

2017 - 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு கற்கை நெறிக்குமான வெட்டுபுள்ளிகளை
அறிவிப்பதற்கு மேலும் 3 மாத காலமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள்ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
2017 - 2018 பல்கலைக்கழக கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் 26ம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள்ஆணைக்குழு அறிவித்துள்ளது. இணையத்தளத்தின் ஊடாகவே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.



இம்முறை ஒரு கற்கை நெறி புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இது களனி பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள நிதிக் கற்கைகள் தொடர்பான கற்கைநெறியாகும். இதற்கு மேலதிகமாக சப்ரகமுவ மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் வைத்திய விஞ்ஞான கற்கை நெறி ஆரம்பிக்கப்படுமென்றும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.



இதன் கீழ் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீட கற்கைநெறிக்காக 75 மாணவர்களும், வயம்ப பல்கலைக்கழகத்திற்கு புதிதாக 75 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்தக்கல்வி ஆண்டுக்காக வைத்திய பீட கற்கைநெறிக்கு 1470 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

ad

ad