புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2018

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகள் - மீண்டும் தலைதூக்கும் ஆவா குழுவின் அடாவடி

யாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில்
மூவர் படுகாயமடைந்தனர். வீடும் அங்கிருந்த பொருட்களும் வாள்வெட்டுக் குழுவினரால் அடித்து நொருக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம்- கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினர் மேற்கொண்ட வாள் வெட்டில் மூவர் படுகாயமடைந்தனர். வீடும் அங்கிருந்த பொருட்களும் வாள்வெட்டுக் குழுவினரால் அடித்து நொருக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளுக்குள் இன்று அதிகாலை வாள்களுடன் நுழைந்த ஆவா குழுவினர் சென்று வீடுகளைத் தாக்கி் சேதப்படுத்தியதுடன், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய பொருட்களையும் அடித்து நொருக்கினர். வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.
இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70) செல்வராசா சஜீபன் (வயது 25) மற்றும் அயல் வீட்டுக்காரப் பெண்மணி பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பிளான் வடக்கில் நேற்று மாலை 4 மணியளவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழுவினர், வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பல்கலைக்கழக மாணவியின் பாடநூல்களை தீயிட்டு எரித்து வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
"வாள்கள், கை கோடாரிகளுடன் இலக்கத் தகடுகளற்ற 4 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பலே வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டின் ஜன்னல்களை உடைத்ததுடன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் பாடநூல்களையும் கற்றல் உபகரணங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.
மேலும் வீட்டின் முன் நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்ததுடன் அங்கிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு பவுண் சங்கிலி என்பவற்றையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

ad

ad