கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இன்று (26) பிற்பகல் 3.30 3 மணியளவில் ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர்கள் மூவர், வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.