புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2018

சர்வதேசமே எதிர்பார்த்த தீர்ப்பு வெளியானது – ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை!

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு  எதிர்வரும்
18ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றம் விரைவில் கூடுமென எதிர்பார்க்கப்படுவதோடு, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட வேண்டும்.
கடந்த ஒக்டோபர் மாதம் பிரதமர் பதவியில் ஜனாதிபதி மைத்திரி மாற்றத்தை கொண்டுவந்த பின்னர், நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டது. நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவிவகித்த ரணில் விக்ரமசிங்க பதவி நீக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரு பிரதான கட்சிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. குறிப்பாக நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஐ.தே.க. கோரி வந்த நிலையில், கட்சி தாவல்களும் ஆரம்பமாகின.
இதனால் கட்சி உறுப்பினர்கள், பல மில்லியன் ரூபாய்க்கு விலைக்கு வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி 5ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டார். “மக்கள் பிரதிநிதிகள் விலைபேசப்பட்டமை, முன்னாள் சபாநாயகரின் பாரபட்சமான செயற்பாடு மற்றும் நாடாளுமன்றில் பிரச்சினை ஏற்படுவதை தடுத்தல் என்பவையே நாடாளுமன்றத்தை கலைக்க வழிவகுத்தது” என ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் தெரிவித்திருந்தார்.
எனினும், ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னர் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென தெரிவித்து உயர்நீதிமன்றில் பத்திற்கும் அதிகமான அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுக்கள் மீதான விசாரணை தொடர்ச்சியாக இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று, தீர்மானம்மிக்க தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad