மூன்று பேரடங்கிய இந்த விசாரணைக் குழுவில், இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன், அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார்.
இதேவேளை, வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வி அமைச்சுக்கு தமது ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதல்களையும் வழங்குவதற்கு 15 பேரடங்கிய மூத்த கல்விமான் சபையொன்றை ஸ்தாபிப்பதற்கும் ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
இந்த சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்