ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், காணொளி ஆதாரங்கள் அனைத்தையும் சான்றாக எடுத்துக் கொ ண்டு சம்பவ இடத்தில் நின்றிருந்த சகலரையும் கைது செய்யுமாறு திருக்கேதீஸ்வரம் ஆலய விடயத்தில் மன்னாா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சிவராத்திாி தினத்திற்கு முதல் நாள் ஆலய சுற்றாடலில் இருந்த அலங்கார வளைவு கிறிஸ்த்த மதத் தைசோ்ந்த சில மத வெறியா்களால் பாதிாியாா்கள் முன்னிலையில் அடித்து நொருக்கப்பட்டது.
இந்த விட யம் தொடா்பாக அமைச்சா் மனோகணேசனின் வழிநடத்திலில், மன்னாா் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு இன்று நீதி மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சாா்பில் ஆஜரான சட்டத்தரணி பாரம்பாியமாக அந்த பகுதியில் இருந்த வளைவு அகற்றப்பட்டமையானது, மத குரோதத்தை துண்டும் செயல் என சுட்டிக்காட்டியிருதனா்.