புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2019

வரைபடங்கள், குண்டுகளின் பாகங்களை வைத்திருந்த பெண் கைது

தம்புள்ளை- மடாடுகம பகுதியில் பொலிஸாா் மற்றும் படையினா் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் பாடசாலைகள், ஹோட்டல்களின் வரைபடங்கள், ஆா்.பி.ஜி மற்றும் மோட்டாா் குண்டுகளின் பாகங்களை வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளாா்.

குறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யும் போது குறித்த பெண்ணிடம், RPG தோட்டாக்களுக்கு பயன்படுத்தப்படும் பகுதி ஒன்றும், மோட்டார் குண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் 4 பகுதிகளும், பாடசாலை மற்றும் ஹோட்டல் என்பனவற்றின் வரைப்படம் மற்றும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மடாடுகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் தம்புளை முகாமிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ad

ad