ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நான் வென்று கொடுத்த யுத்தத்தை முடித்து வைத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், எனது பாதுகாப்பை முழுமையாக நீக்கிவிட்டார்கள்.
நான் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக ஒரு கதை பரவி வருகின்றது. நான் ஒரு போதும் அந்த தரப்பிற்கு ஆதரவு வழங்கமாட்டேன்.
கொலைக்கார கும்பலுக்கு என் ஆதரவு கிடைக்காது. அவர்கள் ஆட்சிக்கு வருவதென்பது மிகப்பெரிய ஆபத்தாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.