புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2019

சூறைக்காற்றில் பறந்த வீட்டுக் கூரைகள்

வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென வீசிய சூறைக்காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்தன. 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மதியம் திடீரென வீசிய சூறைக்காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்தன. 18 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளத்தில் ஒரு வீடும் பெரிய புளியங்குளத்தில் ஒரு வீடும் முதலியார் குளத்தில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன. அத்துடன், வவுனியா வடக்கு மன்னகுளத்தில் ஒரு வீடும் நெடுங்கேணி வடக்கில் ஒரு வீடும் என மொத்தமாக 6 வீடுகளின் கூரைப் பகுதிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டு பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன், பல இடங்களில் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. ஏ-9 வீதி தேக்கவத்தையில் மரம் முறிந்து விழுந்து கார் ஓன்றும் சேதமடைந்துள்ளது

ad

ad