புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2020

கொரொனா அதிர்ச்சி தகவல்: யாழ்ப்பாணம் -8 கிளிநொச்சி -4 இனங் காணல்

சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய நிலையில் யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படு த்தப்பட்டிருந்த 14 போில் 8 பேருக்கு பொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதேசமயம் கிளிநொச்சி- முழுங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 4 பேருக்கு கொரோ னா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேருக்கு 2ம் கட்ட பரிசோதனையும், கிளி நொச்சி கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கு 1ம் கட்ட பரிசோதனையுமாக
இன்று மொத்தமாக 24 பேருக்கு பரிசோதனை நடாத்தப்பட்டிருந்தது. அவர்களில் 12 பேர் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் யாழ்.மாவட்டத்தில் நோயாளர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது

ad

ad