புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2020

www.pungudutivuswiss.com
ஆயுதப் போராட்டம் குறித்த சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என்று, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என்று, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்த விவகாரம் தொடர்பாக இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், “விடுதலைப்புலிகள் பற்றி சுமந்திரன் பேட்டியில் சிங்கள மொழியில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக, எம்மிடம் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவிக்கப்படுவதால், இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் ஆயுதப் போராட்டம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தின் மீது கண்டனம் தெரிவித்துள்ளது.

அதுபோல தமிழீழ விடுதலைக் கழகமும் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளையும், ஆயுதப் போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கடந்த 08 ஆம் திகதி சிங்கள ஊடகத்தில் சுமந்திரன் வெளியிட்ட கருத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை.

கூட்டமைப்பின் பேச்சாளராக இருந்து கொண்டு அவர் தெரிவித்த கருத்துக்கள் தனிப்பட்ட கருத்தாகவும் ஏற்றுக் கொள்ளமுடியாது.

1976 மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட்டில், தமிழர் இழந்த சுதந்திரத்தை மீட்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 1977 பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஆணை கேட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி பெருவெற்றி பெற்றது.

தமிழின விடுதலைக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, 1971 – 1972களில் உருவாகியது. 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஏற்று ஆயுதப் போராட்டத்தின் மூலம் அந்தச் சுதந்திரத்தை அடைய வேண்டுமென்றே அந்த அமைப்பு இயங்கியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் நடவடிக்கைளில் ஒருபொழுதும் பங்காளிகளாக இருந்ததில்லை.

2002 பெப்ரவரியில் ஒஸ்லோ நகரில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அந்த ஒஸ்லோ உடன்படிக்கையின் அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கைகளையே 2004 ஆம் ஆண்டு முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டு, தேர்தல்களில் பெரு வெற்றி பெற்று வருகிறது.

2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 2009 போர் முடிந்த பின் 2010 பொதுத்தேர்தலிலும் தேசியக் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றது. 2011 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 2013 மாகாணசபைத் தேர்தல்களில் 2015 பொதுத்தேர்தல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், ஆதரவாளர்களின் ஆதரவுடனேயே வெற்றிகள் கிடைத்தன.

தென்னிலங்கையில் பௌத்த சிங்கள ஒற்றையாட்சி, பெரும்பான்மைத்துவ ஆட்சி சித்தாந்தத்துடன் எழுச்சி பெற்று வரும் அரசியல் இராணுவச் சூழ்நிலையில்- தமிழ் பேசும் மக்கள், அரசியல், சமூக அமைப்புக்கள் ஒன்றுபட்டு எழுச்சி பெற வேண்டியதே இன்றுள்ள அவசியமாகும்.

விரைவில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைகள் ஒன்று கூடி, மேற்கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கருதியுள்ளோம்” என்றும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ad

ad