குறிப்பாக வேலணையில் TNA ஏழு வட்டாரங்களையும் . Epdp ஐந்து வட்டாரங்களையும் கைப்பற்றியிருந்தன . வரலாற்றில் முதல்தடவையாக தீவகத்தில் கூட்டமைப்பினால் இப்பிரதேச சபையில் வெற்றிபெறமுடிந்தமை குறிப்பிடத்தக்கது . தீவகத்தில் ஒட்டுமொத்தமான வட்டாரங்களிலும் கூட்டமைப்போ , ஈபிடிபியோ தான் முதலிரண்டு இடங்களை மாறி மாறி கைப்பறியிருந்தன . ஆனால் இந்த சுமந்திரனின் புதிய செம்பு ரஜீவனின் சொந்த வட்டாரத்தில் அவரது தந்தையால் நான்காவது இடத்தினையே பெற முடிந்திருக்கின்றது . அவ்வாறான மக்கள் செல்வாக்குடைய ரஜீவன் என்பவர் தனது போலி முகநூல்கள் ஊடாக தானே வடமாகாணத்தின் அடுத்த கல்வியமைச்சர் என்று வெட்கமேயில்லாமல் எழுதிவருகிறார் . அதேபோன்று சமூக வாழ்வு மறுசீரமைப்பு என்று ஒரு சமூகசேவை அமைப்பினை நீண்டகாலமாக நடாத்துவதாக அடிக்கடி முகநூலில் குறிப்பிடுவார் ரஜீவன் . வேடிக்கையென்னவென்றால் அதன் தலைவர் ரஜிவன் , செயலாளர் இவரது சகோதரியின் கணவர் , பொருளாளர் அதே சகோதரியின் புதல்வர் , மனைவியார் உப தலைவராம் ! இது எப்புடி கூத்து ? சிரிக்குறதா அழுகுறதா ? ஐயகோ .
2013 ல் தனது யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிலையத்தினை திறந்து வைக்க ஈபிடிபியின் வேலணை பொறுப்பாளர் ஊத்தை போல் ( சிவராசா ) என்பவரையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் . அப்போதெல்லாம் கூட்டமைப்பினை கடுமையாக முகநூல்களில் சாடி வந்த இவர் 2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரேயே கூட்டமைப்பின் தீவிர முகநூல் ஆதரவாளர் போன்று நடிக்க ஆரம்பித்தார் .
அது எப்படியடாப்பா நம்மால ஒரு முகநூலை கூட பாவிக்க முடியல. உமது பெயரிலேயே இரண்டு வைத்துள்ளீர் . லைக்கு பேஜ் வேற . அதில வேற இந்த மாதிரி 15 பேக்கு ஐடிகளை எப்புடி சமகாலத்தில் உபயோகப்படுத்துறீர் ? நீர் மார்க்கோட இருக்கவேண்டிய ஆளய்யா . அது பத்தாது என்டு உங்க பெயரிலேயே ஒரு வெப்சைட்டு . ஏதோ சமூக அமைப்பு என்ற பெயரில மூணு வெப்சைட்டு . அப்பப்பப்பா என்ன ஒரு கல்விமான் ஐயா நீர் .
#செம்புகள் _பலவிதம் - 1
www.pungudutivuswiss.com