புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2020

இணைந்து செயற்பட விருப்பம்-மாவை சேனாதிராஜா

Jaffna Editor
தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் நிறுவன ரீதியாக இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் நிறுவன ரீதியாக இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இணைந்து செயற்படுவது தொடர்பாக ஆராய்வதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டத்துக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“தமிழ் தேசியப் பரப்பில் இயங்குகின்ற கட்சிகள் மீண்டும் கூடி ஆராய்ந்தோம். இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கட்சிகள் நிறுவன ரீதியாக இணைந்து செயற்பட வேண்டும் என கலந்து கொண்ட அனைத்து பிரதிநிதிகளும் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

அதற்காக நாம் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அமைப்பு ரீதியாக எவ்வாறு நாம் இணைந்து செயற்பட வேண்டும். என்பது குறித்து அந்தக் குழு ஆராயவுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் இந்தக் குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது,

அதன் பின்னர், அந்த அறிக்கை தொடர்பாக மீண்டும் கூடி ஆராயவுள்ளோம்.

மேலும், நேற்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆயினும், தமிழ் தேசியப் பரப்பில் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக இயங்குவதற்காக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் பேசவுள்ளோம்.

தமிழர்களுக்கு எதிராக எந்தவொரு பிரச்சினைகள் எழுந்தாலும் அனைத்து கட்சிகளும் உடனடியாக ஒன்று கூடி தீர்மானங்களை எடுத்து ஓரணியில் பயணிப்பது என தீர்மானித்துள்ளோம்.

இருபதாவது திருத்தச் சட்டமூலத்துக்கு தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்துக் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனவே, நாடாளுமன்றத்தில் அந்தந்தக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி அதனை எதிர்ப்பார்கள் என நான் நம்புகின்றேன்” என்றும் மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad